பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் மீதும் ஒரு பக்கம் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் உலக நாடுகள் மத்தியில் தங்கள் தூதர் மூலம் பாகிஸ்தான் எவ்வாறு தீவிரவாதத்திற்கு துணை புரிகிறது என்பதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கை எடுத்தது மட்டுமின்றி தற்போது பாகிஸ்தானிற்குள்ளும் புகுந்து அதிரடியாக தாக்கி வருகிறது. பாகிஸ்தானும் எதிர்பாக்குதல் அளித்தாலும் இதுவரை ஒரு தாக்குதல் கூட இந்தியாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில் ராணுவம் ஒரு பக்கம் தங்களுடைய தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்தியா தனது தூதரக அதிகாரிகள் மூலம் உலக நாடுகளை தங்கள் பக்கம் கவர சுறுசுறுப்பாக பணி செய்து கொண்டிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட 200 நாடுகளில் உள்ள இந்திய தூதர்கள் அந்த நாட்டின் அரசிடம் பாகிஸ்தான் எவ்வாறு பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருகிறது என்பதை ஆதாரத்துடன் காண்பித்து வருகிறார்கள்.
குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்திய தூதர்கள் நேரடியாக அரசின் அதிகாரிகளிடமே சென்று உண்மையை விளக்கி வருகின்றனர்.
லண்டனில் உள்ள இந்திய தூதர் விக்ரம் பிரபு சாமி பாகிஸ்தான் ராணுவம் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்துவதை கடுமையாக விமர்சித்தார்.
பயங்கரவாதிகளின் உடல்கள் அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படுகிறது என்றால் அந்த பயங்கரவாதிகளை அரசுதான் உருவாக்கியதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுய்.
மேலும் இந்தியா, பாகிஸ்தான் உடன் போர் செய்யவில்லை என்றும், பயங்கரவாதிகளுடன் மட்டுமே போர் செய்கிறது என்றும் உலக நாடுகளின் அரசுகளிடம் இந்திய தூதர்கள் விளக்கி வருகின்றனர்.
உலகம் முழுவதில் உள்ள 200 நாடுகளில் இந்திய தூதர்கள் சுறுசுறுப்புடன் பாகிஸ்தானின் முகத்தை தோலுரித்து வருவதை அடுத்து இதுவரை ஒரு நாடு கூட பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்றும், மாறாக இந்தியாவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை சரிதான் என்றும் தீவிரவாதத்தை வேரோடு அழிப்பது தான் உலக மக்களுக்கு நல்லது என்றும் பல நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பேசி வருகின்றனர்.
பாகிஸ்தானின் நட்பு நாடுகளான சீனா, அரபு நாடுகள் கூட பாகிஸ்தானுக்கு உதவ முன் வரவில்லை என்பதும், ஆனால் அதே நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று அமெரிக்காவே கூட இந்தியா-பாகிஸ்தான் போரில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து தன்னுடைய தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்டது என்று கூறப்பட்டு வருகிறது.