மீனா, ரோகிணி, ஸ்ருதி இடையே கடும் வாக்குவாதம்.. விஜயாவின் விவாகரத்து திட்டம்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில், இன்றைய எபிசோடில் மீனாவுக்கு பெருமை கிடைத்ததை ரவி, சுருதி ஆகியோர் சொல்லிக் கொண்டிருக்க, அதனால் எரிச்சலாகும் மனோஜ், ‘‘நீங்கள் செய்வதெல்லாம் பிசினஸா?…

sa

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில், இன்றைய எபிசோடில் மீனாவுக்கு பெருமை கிடைத்ததை ரவி, சுருதி ஆகியோர் சொல்லிக் கொண்டிருக்க, அதனால் எரிச்சலாகும் மனோஜ், ‘‘நீங்கள் செய்வதெல்லாம் பிசினஸா? அதெல்லாம் தினக்கூலி. நான் செய்வதுதான் பிசினஸ்,’ என்று கூற, அதற்கு முத்து மற்றும் ரவி ஆகிய இருவரும் கோபப்பட்டு அவரை திட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.

இதனை அடுத்து, மொட்டை மாடியில் மனோஜ், முத்து, ரவி ஆகிய மூவரும் சரக்கடித்துக்கொண்டே பேசி வருகின்றனர். அப்போது மனோஜ்க்கு இருவரும் அறிவுரை கூறுகின்றனர். ‘நீ செய்வது தப்பு. அம்மாவின் பேச்சைக் கேட்டு, அண்ணியுடன் நீ பேசாமல் இருக்க கூடாது. எப்படியாவது அம்மாவை சமாதானப்படுத்து, அண்ணி உன்னை நம்பி வந்தவர்கள்’ என்று ரவி சொல்ல, ‘உன்னுடைய பிரச்சனையை நீ தான் கேட்க வேண்டும். அம்மா இல்லாமல் நாம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நம்மை நம்பி வந்த பொண்ணை காப்பாற்ற வேண்டும்,’ என்று முத்து, ரவியாக இருவரும் அறிவுரை கூறியிருந்தார்கள்.

இதனை அடுத்த கிச்சனில், மீனா, சுருதி மற்றும் ரோகிணி ஆகியோர் உரையாடும் காட்சி நடக்கிறது.

‘ஆண்ட்டி எப்போதும் உங்களை திட்டிக் கொண்டே இருக்கிறார். நீங்கள் ரொம்ப பாவம்,’ என்று சுருதி சொல்ல, ரோகிணியும் ‘இப்போது எனக்கு நேரம் சரியில்லை. என்னுடைய நாளெல்லாம் தப்பாக இருக்கிறது,’ என்று சொல்கிறார்.

இதற்கு, ‘ஏதாவது ஒரு ஐடியா செய்ய வேண்டும்,’ என்று சுருதி யோசிக்க, அப்போது ‘ஒரு சாமியாரை செட்டப் செய்து, “உங்கள் மூத்த மருமகளை நன்றாக வைத்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும்” என்று சொல்லலாம்’ என்று கூறுகிறார்.

‘அதெல்லாம் வேண்டாம். அவ்வாறு செய்தால் இருக்கிற ரெண்டு பேர் உடனே போட்டு கொடுத்துவிடுவார்கள்,’ என்று சொல்ல, மீனா அதற்கு கோபமடைந்து, ‘எங்களுக்கு இதுதான் வேலையா? நாங்கள் யாரையும் கெடுக்க வேண்டும் என்று எண்ணவில்லை என்று கூற, உடனே, ரோகிணி, நீங்கள் பிரெளன் மணியை பார்த்தவுடன் என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். அல்லது அவரை தனியாக அழைத்து, அவரிடம் பேசி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்ததால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தது,’ என்று சொல்லுகிறார்.

அப்போது சுருதி , ‘தப்பெல்லாம் செய்தது நீங்கள். மீனாவை ஏன் திட்டுகிறீர்கள். நீங்கள் தான் எல்லா பொய்யும் சொன்னவர், நீங்கள் பொய் சொல்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. ஒருவேளை நானும் ரவியும் பிரவுன் மணியை பார்த்திருந்தால், அவரை வீட்டுக்கு தான் கூட்டி வந்திருப்போம். மீனா மீது எந்த தப்பும் இல்லை,’ என்று சுருதி சொல்கிறார்.

அதனால் எரிச்சல் அடையும் ரோகிணி, ‘நீங்க ரெண்டு பேர் மட்டும் இந்த வீட்டில் நல்லா இருந்துக்கோங்க. நான் மட்டும் கெட்டவளாக இருந்து கொள்கிறேன்,’ என்று கூறிவிட்டு, கோபத்துடன் வெளியேறுகிறார்.

அப்போது, ‘மீனா, இதற்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள்,’ என்று சொல்கிறார். ‘சம்பந்தப்பட்டவர்களே கோபப்பட்டு போகும்போது நாம என்ன செய்ய முடியும் என்று கூறிவிட்டு, தன்னுடைய அறைக்கு செல்கிறார்.

இதனை அடுத்து, ரோகிணி பார்வதி வீட்டிற்கு சென்று செல்லும் காட்சியுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

நாளைய எபிசோடில், பார்வதி இடம் விஜயா, மனோஜ், ரோகிணி ரெண்டு பேரையும் நான் பிரிக்கப் போகிறேன். அதற்கு ஏதாவது சாமியார் இருந்தால் சொல்,’ என்று கேட்க, அதன் பிறகு ரோகிணி தனியாக பார்வதியிடம், ‘நீங்கள் பார்க்கப் போகிற சாமியார் யார் என்று என்னிடம் முன்கூட்டியே சொல்லுங்கள். நானும் ஏதாவது செய்கிறேன்,’ என்று சொல்வதுடன், நாளைய எபிசோடு வீடியோ முடிவுக்கு வருகிறது.