பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் “அமெரிக்கா பாகிஸ்தானை சில இழிவான வேலைக்கு பயன்படுத்தியது” என்று கூறியது குறித்து, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்கா பாகிஸ்தானை இழிந்த செயல்களுக்காக பயன்படுத்துகிறது எனக் கூறுவது என்னை கோபப்படுத்துகிறது. உங்கள் குற்றச்சாட்டுகள் குறித்து மிகவும் தெளிவாகவும் கவனமாகவும் இருங்கள். இது அமெரிக்காவின் நோக்கங்களை விமர்சிப்பது போல இருக்கிறது,” என்று மெக்கார்மிக் கூறினார்.
இவ்வாறு நீங்கள் குற்றஞ்சாட்டுவது அமெரிக்காவை அவமதிக்கும் போல் ஆகும். இந்தியாவுக்கு தீய நோக்கங்களுடன் சில செயல்களை செய்ய வேண்டும் என்று அமெரிக்க கூறியதாக இனி சொல்ல வேண்டாம்,” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் இருக்கப்போகிறதா அல்லது அமைதிக்கான முயற்சியில் பங்கேற்கிறதா என்பதை முடிவு செய்ய வேண்டும். தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக எதையும் செய்யாமல், எல்லையில் படைகளை திரட்டி இந்தியாவை குற்றம் சொல்வது சரியல்ல,” என்றும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் இன்னும் தீவிரவாதிகள் செயலில் உள்ளனர் என்றும், அந்த பகுதியை இந்தியாவில் இருந்து பிரிக்க விரும்பும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் மெக்கார்மிக் தெரிவித்தார்.
மேலும் காஷ்மீரம் பாகிஸ்தானின் மூச்சு என்ற பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.