இந்த நிலையில், பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனமான PIA, தனது சர்வதேச விமானங்களை இந்திய வான்வழியை தவிர்த்து இயக்கத் தொடங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள், இந்தியாவை தவிர்த்து சீனா மற்றும் தாய்லாந்து வழியாக பயணிக்கின்றன.
பாகிஸ்தானில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானம் சீனா, தாய்லாந்து வழியாக சென்றது. புதிய பாதை பயண நேரத்தையும் செலவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 24-ஆம் தேதி பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தடை விதித்ததை தொடர்ந்து, இந்தியா அதற்கு பதிலடி அளித்து, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வழியை பயன்படுத்த கூடாது என அறிவித்துள்ளது. டெல்லி–துபாய் போன்ற வழிகள் இப்போது ஈரான் வழியாக செல்கின்றன. Air India-வின் நீண்ட தூர விமானங்கள், எடுத்துக்காட்டாக டெல்லி–சிகாகோ விமானம் (AI127), இப்போது வியன்னாவில் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த பயண நேரம் 14 மணி நேரத்திலிருந்து 19 மணிநேரமாக அதிகரித்துள்ளது.
இன்டிகோவின் டாஷ்கென்ட்–டெல்லி விமானம், முன்பு 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது. தற்போது 5 மணி நேரமாக அதிகரித்துள்ளது. ஆனாலும் இது பெரிய பாதிப்பாக கருதப்படவில்லை.
இந்த நிலையில் இந்திய அரசு மே 30 முதல் மே 23, 2025 வரை பாகிஸ்தான் பதிவு செய்யப்பட்ட அல்லது பாகிஸ்தான் நிறுவனங்கள் இயக்கும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது. இதில் ராணுவ விமானங்களும் அடங்கும். இந்தியாவின் தடை காரணமாக பாகிஸ்தானில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் விமானம் ஆயிரக்கணக்கான கிமீ அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பலர் பயணத்தை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.