இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. குற்றத்தை முன்கூட்டியே தடுக்க உதவும் AI போலீஸ்..!

  மும்பை போலீசார் குற்றங்களை தடுக்கவும், பொது பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மும்பையில், குற்றங்களை முன்கூட்டியே கணிப்பது,  குற்றவாளிகளை…

ai police

 

மும்பை போலீசார் குற்றங்களை தடுக்கவும், பொது பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மும்பையில், குற்றங்களை முன்கூட்டியே கணிப்பது,  குற்றவாளிகளை விரைவில் அடையாளம் காண்பது பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும், அதற்காக இந்த AI கருவிகள் காவல்துறைக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

மும்பை போலீசார், K J Somaiya தொழில்நுட்ப நிறுவத்துடன் இணைந்து உருவாக்கிய Predictive Policing System-ஐ செயல்படுத்தியுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான குற்ற பதிவுகளை ஆய்வு செய்து, கைபேசி திருட்டு, வாகன திருட்டு, தங்க சங்கிலி திருட்டு போன்றவை எப்போது, எங்கு நடைபெறும் என்பதை கணிக்க இந்த AI பயன்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து, வாரந்தோறும் போலீசாருக்கு சாத்தியமான குற்றங்கள் எங்கு, எப்போது நடக்கும் என்பதற்கான அறிக்கைகளை உருவாக்குகிறது. மாதாந்திர டேட்டாக்கள் வழியாக ஒவ்வொரு பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவ வகைகளை கண்காணிக்கவும் உதவுகிறது.

2025 மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில், மும்பையின் கிழக்கு மாவட்டங்களில் மூன்று குற்றங்களை முன்கூட்டியே தடுக்க AI கருவி உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 75 சதவீத துல்லியத்துடன் இந்த கருவி செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

“இந்த Predictive Policing System எங்களது மனித வளத்தை திறமையாகப் பயன்படுத்தவும், குற்றம் நடக்கும் முன்பே நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது,” எனக் மும்பை போலீசின் குற்றப்பிரிவு துணை கமிஷனர் கூறினார்.

மும்பையின் கண்காணிப்பு கருவிகள் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது நகரில் 10,000 காவல் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன; இவற்றுடன் மேலும் 70,000 கேமராக்கள் தனியார் குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களில் உள்ளன. இவை அனைத்தும் முகம் மற்றும் வாகன எண் அடையாளம் காணும் AI கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு பெரிய தாக்குதலுக்குப் பிறகு, போலீசார் AI கருவிகளைப் பயன்படுத்தி சிசிடிவி வீடியோக்களை விரைவாக ஆய்வு செய்தனர். சந்தேகப்படும் நபரின் செயல்களை பின் தொடர்ந்து, முகத்தை அடையாளம் காணவும், வாகன எண்களை சரிபார்த்து, 72 மணி நேரத்திற்குள் கைது செய்யவும் முடிந்தது. இது போன்ற வேகமான நடவடிக்கை AI இன்றி சாத்தியமாகாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை நகர கண்காணிப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில் முகம் மற்றும் கண் கண்ணாடியின் மூலம் அடையாளம் காணும் மேலும் அதிக திறன் வாய்ந்த கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. இந்த புதிய கேமராக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் டிஜிட்டல் டேட்டாவுடன் இணைக்கப்படும்.

மகாராஷ்டிர அரசு MARVEL (Maharashtra Research and Vigilance for Enhanced Law Enforcement) என்ற தனிச்சிறப்பு பிரிவை தொடங்கியுள்ளது. இது முழு மாநிலத்திற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் போலீசாருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மார்வெல் பிரிவு, காணாமல் போனவர்கள், திருடப்பட்ட வாகனங்கள், மற்றும் இணைய குற்றங்கள் போன்ற விசாரணைகளில் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குகிறது.

இது குறித்து நிபுணர்கள் கூறியபோது, ‘மும்பை போலீசின் AI பயன்பாடு மற்ற இந்திய நகரங்களுக்கும் முன்னோடியாக அமைகிறது. குற்றங்களை எதிர்நோக்கிச் செயல்படவேண்டும் என்ற நோக்கத்தில், இது ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

“செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு விசாரணைக் கருவியாக மட்டுமல்ல. இது எங்கள் தினசரி காவல் பணியின் ஒரு அங்கமாக மாறியுள்ளது,” என மும்பை போலீசில் ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த புதிய முயற்சிகளுடன், மும்பை போலீசார் நகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த புதியதொரு தரத்தை ஏற்படுத்தி வருகின்றனர். குற்றங்களை நடைபெறும் முன்பே தடுக்கும் முனைப்புடன் நகரம் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.

எனவே இனி குற்றவாளிகள் குற்றம் செய்துவிட்டு ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பது மட்டுமல்ல, எதிர்காலத்தில் குற்றத்தை முன்கூட்டியே AI தொழில்நுட்பம் மூலம் சாத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.