முதல்வர் பதவி கொடுக்காவிட்டால் அதிமுகவை உடைக்குமா பாஜக? ஈபிஎஸ் உஷாராக இருக்க வேண்டுமா?

  சமீபத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் தலைவர் என்று அதிகாரப்பூர்வமாக அமித்ஷா அறிவித்தார். ஆனால், அதே நேரத்தில்…

amitshah eps

 

சமீபத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் தலைவர் என்று அதிகாரப்பூர்வமாக அமித்ஷா அறிவித்தார்.

ஆனால், அதே நேரத்தில் “எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர்” என்ற வார்த்தை அமித்ஷா வாயில் இருந்து வரவில்லை. எனவே, அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வர் பதவி பாஜகவுக்கு வேண்டும் என்ற அழுத்தம் வைக்கப்படலாம் அல்லது குறைந்தபட்சம் துணை முதல்வர் பதவி வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு வேளை முதல்வர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்காவிட்டால், அதிமுகவை உடைக்க கூட பாஜக தயங்காது என்று கூறப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சிக்கு ஏற்பட்ட நிலைதான் அதிமுகவிற்கு ஏற்படும் என்றும், “பகைவனை உறவாடி கெடு” என்ற பழமொழியின்படி தான் பாஜக செயல்படும் என்றும், எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது கட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

எனவே, கூட்டணியை உறுதி செய்தது மட்டும் போதாது. முதல்வர் பதவி அதிமுகவுக்கு தான் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், பாஜகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடையாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்த அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், இவையெல்லாம் இப்போது பேசினால் சரியாக இருக்காது, தேர்தலுக்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என்பது சில தலைவர்களின் எண்ணமாக உள்ளது. அதிமுக ஒரு சிவசேனாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால், எடப்பாடி பழனிச்சாமி ஆரம்ப முதலே உஷாராக இருக்க வேண்டும் என்றும், பாஜகவுடன் ஒருமுறை சிக்கிவிட்டால் வெளியே வருவது மிக கடினம் என்பதால், புத்திசாலித்தனத்துடன் காய் நகர்த்த வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.