இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்துவிட்டு யாரும் உயிருடன் போக முடியாது: ஆர்.எஸ்.எஸ்

  ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, ஒரு வலிமையான செய்தியை உலகுக்கு தெரிவிக்க தேவையானதாக இருந்தது…

rss

 

ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை, ஒரு வலிமையான செய்தியை உலகுக்கு தெரிவிக்க தேவையானதாக இருந்தது என ஆர்எஸ்எஸ் தேசிய ஊடக பிரிவு தலைவர் சுனில் அம்பேகரா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “இந்தியா தற்போது பொருளாதார வளர்ச்சிக்கு சென்று கொண்டிருக்கும் ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறது. வாணிப வளர்ச்சி, நாட்டின் அமைதியும் ஒற்றுமையும் அவசியமானவை. அதேபோல பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சிந்தூர் நடவடிக்கையும் அவசியமானது,” என்றார்.

“சிவாஜி மகாராஜா மற்றும் அஹில்யாபாய் போல வீர பரம்பரையை கொண்ட நாடு இந்தியா என்பதை வலியுறுத்த வேண்டிய நேரம் இது. எவரும் வந்து, நம் பெண்களின் நெற்றியில் உள்ள சிந்தூரை துடைத்துவிட்டு உயிருடன் போக முடியாது. இது புதிய பாரதம்!” என கூறினார்.

அதேபோல் ஆர்எஸ்எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் ஒரு கொடூரமான செயல். அதற்கான பதிலாக, இந்தியா சிந்தூர் நடவடிக்கையின் மூலம் தன் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது, இது பாராட்டத்தக்க ஒன்று.

இந்தியா எந்த பொதுமக்களையும் குறிவைக்கவில்லை. ஆனால், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை வதம் செய்ததுடன், பயங்கரவாத அடித்தளங்களை அழித்தது. அதேசமயம், பாகிஸ்தானிலுள்ள பல விமான தளங்களையும் தாக்கியது.

இத்துடன், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட ஒரு விமானத்தளம் கூட அழிக்கப்பட்டது. இது, சீன அரசுக்கு வலிமையான எச்சரிக்கையாகவும் செயல்பட்டது.” என்றார்.