முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை.. இன்றிரவு மீண்டும் ஒரு சம்பவமா?

  பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்திய மறுநாளே, பிரதமர் நரேந்திர மோடி, இன்று தன்னைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சூழ்நிலையை மதிப்பீடு செய்ய  முக்கிய ராணுவ ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனை…

army chiefs

 

பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்திய மறுநாளே, பிரதமர் நரேந்திர மோடி, இன்று தன்னைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சூழ்நிலையை மதிப்பீடு செய்ய  முக்கிய ராணுவ ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முப்படை தளபதிகள் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு பிரதமரின்  இல்லத்தில் நடைபெற்றதாகவும், இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரதமர் மோடி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை சந்தித்து தற்போது நிலவும் சூழ்நிலையை பற்றி விவாதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், முன்னாள் இராணுவத் தளபதிகள், விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்  தாக்குதலுக்கு முன்பும் பிரதமர் மோடி முப்படை தளபதிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்தார் என்பதும் அதன் பிறகு சில மணி நேரத்தில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது மீண்டும் பிரதமர் முப்படை தளபதிகளை சந்தித்துள்ள நிலையில் இன்று இரவு ஒரு சம்பவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் 500 சிறிய ரக ட்ரோன்களை இந்தியா மீது ஏவி இருக்கும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தரப்பிலிருந்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் இதனால் பாகிஸ்தான் தரப்பில் அதிக சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது