இந்தத் தகவலின் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை காரணமாக, பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதே UAE கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும், “பாகிஸ்தானுக்கு ஆதரவாளராக நாம் நினைக்கப்படக்கூடாது” என்ற எண்ணம் UAE கிரிக்கெட் வாரியத்தில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
UAE-யில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகப்பெரிய பார்வையாளர்கள் ஆதரவு உள்ளதால், போன்ற சமயத்தில் PSL போன்ற ஒரு போட்டியை நடத்துவது சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு இருக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
UAE, கடந்த வருடங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் நெருக்கமான உறவுகளை பேணி உள்ளது. குறிப்பாக 2021-ஆம் ஆண்டு T20 உலக கோப்பை மற்றும் IPL போட்டிகள் UAE-யில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இது போன்ற சூழ்நிலைகளில், PSL போட்டிகளை நடத்துவது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவுகளை மேலும் மோசமாக்கும் என்று UAE கருதுகிறது.
இதே நேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த விஷயத்தில் அரசியல் கலந்து விடக்கூடாது” என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. இந்த வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, “எங்கள் ரசிகர்கள், நாட்டில் போட்டிகளை நேரில் காண முடியாமல் போவதே வருத்தமளிக்கிறது. ஆனால், வீரர்களின் மன நலத்தையும், பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தியே இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் 4 லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆஃப் சுற்றுகள் ராவல்பிண்டி, முல்தான், லாஹூர் ஆகிய நகரங்களில் நடக்கவிருந்தன. ஆனால், சமீபத்தில் இந்தியா பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்தியதையடுத்து பாதுகாப்பு சூழ்நிலை கடுமையாக மாறியுள்ளது.
மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பல ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பு குழுக்கள் PSL போட்டிகளை ஒளிபரப்ப மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.