தாக்குதல் நடைபெறும் போது TRF அமைப்பை கராச்சி மற்றும் முஜஃபராபாத்தில் உள்ள லஷ்கர்-எ-தைபா கட்டுப்பாட்டாளர்கள் நேரடியாக வழிநடத்தினர் என்பதற்கான ஆதாரங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. தொலைபேசி அழைப்புகள், செயற்கைகோள் படங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட சாதனங்கள் போன்றவை இதில் உள்ளன. இதன்மூலம் TRF மற்றும் லஷ்கர்-எ-தைபா தொடர்பு வெளிப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தானின் ISI அமைப்பு, TRF-ஐ காஷ்மீரிய தீவிரவாத அமைப்பாக காட்சிப்படுத்த முயன்றது. ஆனால் TRF மீது இருக்கும் லஷ்கர்-எ-தைபா கட்டுப்பாட்டை இந்தியா ஆதாரங்களுடன் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடம் தற்போது உலகளவில் எதிர்மறையான கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் TRF தலைவர்களுக்கு எதிரான இலக்கான தடைகள் விதிக்க கோர திட்டமிட்டுள்ளது. இது, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முகமையை உலகுக்கு அம்பலப்படுத்தும் புதிய கட்டமாக அமையும்.
இந்த செய்தி உலக நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் எவ்வாறு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, இயக்கி, பின்னால் தங்கள் தொடர்பை மறைக்க முயல்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.