பாகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒவைசி “பாஜக எப்போதும் ‘வீட்டுக்குள் புகுந்து அடிப்போம்’ என பேசுகிறார்கள். இந்த முறையாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து அந்த பகுதியை கைப்பற்றி அங்கேயே உட்காரட்டும். பாராளுமன்ற தீர்மானத்தின்படி அந்த பகுதி நம் நாட்டுக்கே சொந்தம் என AIMIM தலைவரும், லோக்சபா எம்பியுமான ஒவைசி கூறினார்.
மேலும், மும்பை 26/11 தாக்குதல் முதல் பஹல்காம் தாக்குதல் வரை நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களை நினைவுகூறி, பயங்கரவாதத்தை முழுமையாக நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என அவர் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்பகுதியை மீட்பது தான் ஒரே வழி என்றும் ஒவைசி சொல்வதை மத்திய அரசு கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், இந்த அடி பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்தது போல் இருக்கும் என்றும் அவரது கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த தாக்குதல் மூலம் யாராவது வெற்றி பெற்றதாக நினைத்தால், அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இது நரேந்திர மோடி அரசு! ஒருவரும் தப்பிக்க முடியாது. இந்தியாவின் ஒவ்வொரு அங்குலத்திலும் பயங்கரவாதத்தை முற்றிலும் வேரோடு ஒழிப்போம்’ என்று கூறினார்.