இதுகுறித்து சுஷாந்த் கூறியதாவது: இன்று என் திருமணம் நடக்கிறது. ஆனால் அதைவிட பெருமையாக இந்திய ராணுவம் இன்று பாகிஸ்தானில் தீவிரவாத தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்திய நாள் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. நான் இந்த ஒத்திகையில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் என் திருமணத்தை விட என் தேசம் தான் முதன்மையானது. ராணுவ வீரர்கள் கூட திருமண நாளில் எல்லைக்கு செல்ல தயாராக இருப்பார்கள். அவசியம் ஏற்பட்டால் நாமும் தயங்கமாட்டோம்.”
இந்தியாவில் தேசப்பற்று என்பது தனிமனித மகிழ்ச்சியை விட மேலானது என்பது இந்த மணமகனின் செயலில் இருந்து தெரிய வருகிறது.