ஒரு ட்ரோன், ஒரு ஏவுகணை உருப்படியாக இல்லை.. சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போடும் பாகிஸ்தான்..!

  பாகிஸ்தான் இந்திய வான்வெளியை பலமுறை ஊடுருவ முயன்றதற்கு  “குழந்தைத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்” என இந்தியா  கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னரும் பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்பதை…

ind pak

 

பாகிஸ்தான் இந்திய வான்வெளியை பலமுறை ஊடுருவ முயன்றதற்கு  “குழந்தைத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்” என இந்தியா  கடும் எச்சரிக்கை விடுத்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னரும் பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய விமானப்படை இரண்டாவது நாளாக பாகிஸ்தான் வான் பாதுகாப்பை ஊடுருவியது. “பாகிஸ்தான் வான் பாதுகாப்பு முறைமைகள் பலவீனமடைந்து உள்ளன என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதனால் தான் இந்தியா லாகூர், ராவல்பிண்டி போன்ற பெரிய நகரங்களில் கூட ட்ரோன்கள் அனுப்ப முடிந்துள்ளது,” என ராணுவ அதிகாரிகள் கூறினர்.

மேலும், “பாகிஸ்தான் இரவில் நம் நாட்டின் ரேடார்களை தாக்க ‘லாய்டரிங்’ வெடி பொருட்களை அனுப்பியது. ஆனால் இந்திய விமானப்படை அதனை தரையிறக்கி அழித்தது,” எனத் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் பதுங்கிய ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கியது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது பொதுமக்கள் பகுதிகள், ராணுவ தளங்கள் தாக்கப்படவில்லை என அரசு வலியுறுத்தியுள்ளது.

நேற்றும் இன்றும் பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் இந்திய ராணுவ தளங்களை  தாக்க முயற்சி செய்தது. ஆனால் இந்தியாவின் கூட்டு விமான பாதுகாப்பு முறை அந்த தாக்குதல்களை தடுத்தது என இந்திய ராணுவம் அறிக்கையில் தெரிவித்தது.

இன்று காலை இந்தியா, பாகிஸ்தான் விமான பாதுகாப்பு ராடார்கள் மீது பதிலடி நடத்தியது. லாகூரில் உள்ள ஒரு ரேடார் முழுமையாக அழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும், பாகிஸ்தான் ஏவுகணைகள் மூலம் குப்வாரா, பூர்ண்ச் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதில் 16 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், இதில் 3 பெண்கள், 5 குழந்தைகளும் உள்ளனர். இதற்கு பதிலடி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா நிலையை தீவிரப்படுத்த விரும்பவில்லை என்றாலும், பாகிஸ்தான் அதன் எல்லையை கடக்காமல் இருந்தால் மட்டுமே அமைதி தொடரும் என ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்திய எல்லை மாநிலங்களில் பாகிஸ்தான் ஆயுதங்களின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை சீனாவின் ஏற்றுமதி மாடலான PL-15E ஏவுகணை பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முதல் கட்டம் தான் இது, நிலைமையைப் பொருத்து மேலும் நடவடிக்கைகள் இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பாகிஸ்தானின் எந்த தீவிர முயற்சிக்கும் பதிலளிக்க இந்தியா தயாராக உள்ளது” என உறுதிப்படுத்தினார்.