இந்த தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் தொடர்ந்து முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மத்திய அரசு, மே 7ஆம் தேதி எல்லை மாநிலங்களில் போர்க்கால செயல்முறைகளை பரிசோதிக்க பாதுகாப்பு பயிற்சிகளை நடத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், குஜராத் போன்ற எல்லை மாநிலங்கள் இதில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி அடுத்தடுத்து உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது, பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது, குறிப்பாக பாகிஸ்தான் இருந்து வரும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ஐநா கவுன்சிலில் இந்தியா தனது நிலையை விளக்கி கூறியது, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடமிருந்து ஆதரவு பெற்றது உள்ளிட்ட நடவடிக்கைகளை பார்க்கும்போது பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நிமிடத்திலும் தாக்குதல் நடத்த ஆயத்தமாக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.