ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினர்கள், பாகிஸ்தானை கடுமையாக சந்தேகிக்க தொடங்கியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியுரிமை கூட்டத்தில் நடைபெற்ற இந்த விவாதத்தில், பாகிஸ்தான் முன்வைத்த ‘தவறான குற்றச்சாட்டு’ என்பதை ஐநா உறுப்பினர்கள் நிராகரித்தனர். மேலும், இந்த தாக்குதலில் ‘லஷ்கர்-ஏ-தொய்பா’ தீவிரவாத அமைப்பு தொடர்புடையதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
பாகிஸ்தான் இந்த விவகாரத்தை உலகளவில் எடுத்துச் செல்ல முயன்ற முயற்சி தோல்வியடைந்தது. மேலும், பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதத்தால் தாக்குவோம் என்ற மிரட்டலுக்கும் ஐநா கண்டனம் தெரிவித்தது.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இந்த கூட்டத்தில் பேசிய போது, ‘பஹல்காம் தாக்குதல் மிகவும் கொடூரமான ஒன்று. இதை நான் தீவிரமாக கண்டிக்கிறேன். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தற்போது உச்ச நிலையில் உள்ளது. இரு நாடுகளும் ஐ.நாவின் பணிக்கு முக்கியமான பங்களிப்பு அளிக்கின்றன. எனவே இந்த உறவுகள் மோசமாகும் நிலை வருவது வருத்தமானது. நாங்கள் இந்த பதற்றத்தை குறைக்க தயாராக இருக்கிறோம். இருநாடுகளும் சமாதானத்திற்கு முயல வேண்டும்,” என்றார்.
இதன் மூலம் நான் பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் உலக அளவில் கொண்டு சென்ற முயற்சிக்கு தோல்வி தான் கிடைத்துள்ளது. பாகிஸ்தானை உலக நாடுகள் மற்றும் ஐநா நம்பவில்லை என்றும் கண்டிப்பாக தாக்குதலுக்கு பின்னணியாக பாகிஸ்தான் இருந்திருக்க கூடும் என்றும் அதனால் பாகிஸ்தான் இனிமேலாவது திருந்தி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.