பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா இன்று அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டது. இந்த தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. பல பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு வலையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில் பாதுகாப்பு படைகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை பற்றிய விரிவான செய்தியறிக்கை, இன்று காலை 10 மணிக்கு பாதுகாப்பு துறை வழங்க உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் ராணுவம், நாடு முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளது. எல்லை பகுதியில் இடையிடையே துப்பாக்கி சூடும் வெடிகுண்டு தாக்குதலும் நடந்து வருகிறது. நேற்று இரவில், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் மூன்று இந்திய பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்ட 9 தீவிரவாத முகாம்களின் பட்டியல்:
1. Markaz Subhan Allah, Bahawalpur – JeM
2. Markaz Taiba, Muridke – LeT
3. Sarjal, Tehra Kalan – JeM
4. Mehmoona Joya, Sialkot – HM
5. Markaz Ahle Hadith, Barnala – LeT
6. Markaz Abbas, Kotli – JeM
7. Maskar Raheel Shahid, Kotli – HM
8. Shawai Nalla Camp, Muzaffarabad – LeT
9. Syedna Bilal Camp, Muzaffarabad – JeM
இந்த தாக்குதலுக்குப் பிறகு, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்துச் கொண்டாடினர். ஆனால், சில சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை பற்றிய எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையான தகவல்களை மட்டும் பகிருமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் மூன்று இந்திய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவராக ரூபி கௌர் என்பவர், தனது வீட்டில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.