அடி தூள்.. இந்திய ராணுவத்தில் அதிநவீன ஹெலிகாப்டர்.. அதிர போகுது எதிரி நாடு..!

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில், த்ருவ்  என்ற பெயர் கொண்ட ‘அதிக திறன் கொண்ட லைட் ஹெலிகாப்டர்’ (ALH)  ராணுவம் மற்றும் விமானப்படையில் மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த…

helicopter
இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில், த்ருவ்  என்ற பெயர் கொண்ட ‘அதிக திறன் கொண்ட லைட் ஹெலிகாப்டர்’ (ALH)  ராணுவம் மற்றும் விமானப்படையில் மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த அனுமதி, ஹெலிகாப்டரின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் தரம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட பிறகு வழங்கப்பட்டுள்ளது.சமீபத்தில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிந்தைய பாகிஸ்தானுடனான பதற்றமான சூழ்நிலையில் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

த்ருவ் ஹெலிகாப்டரின் சிறப்புகள் என்னென்ன?

ALH த்ருவ் என்பது பல பணிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் ஆகும். இது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் இது முக்கியப் பங்கை வகித்து வருகிறது.

ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த ஹெலிகாப்டர்கள் சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டன. பின்னர், கோளாறுகளை ஆராய டிஐ (DI) குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பரிந்துரைத்த மாற்றங்களை HAL நிறுவனமும் ராணுவம், விமானப்படையுடன் இணைந்து செய்து முடித்துள்ளது.

இந்த நிலையில் HAL வெளியிட்ட தகவலில், “த்ருவ் மீண்டும் சேவை தொடங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி, குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் கோஸ்ட் கார்டுக்கு சொந்தமான த்ருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, 330-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டன.

இப்போது மீண்டும் ALH த்ருவ் ஹெலிகாப்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது இந்திய ராணுவத்துக்கு பெரிய முன்னேற்றமாகும். இவை படைகளுக்கு போக்குவரத்து, கண்காணிப்பு மற்றும் போர் சார்ந்த பணிகளில் பெரும் உதவியாக இருக்கும். பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்த அனுமதி முக்கியமானது என கூறப்படுகிறது.