எதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்.. ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்கு பழிவாங்க இந்தியா தீவிர முடிவுகள் எடுத்து வருவதால், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின்  தலைவர்…

ind vs pak2

 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்திற்கு பழிவாங்க இந்தியா தீவிர முடிவுகள் எடுத்து வருவதால், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின்  தலைவர் சுல்தான் சௌத்ரி பதற்றத்துடன் ஐநாவுக்கு ‘ஏதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள்’ என கெஞ்சியபடி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐநா நினைத்தால் போரை தடுக்கலாம். எல்லாம் நடக்கக்கூடிய சூழ்நிலைதான்.  ஐநா செயலாளர் தலையீடு செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் காஷ்மீரில் மக்கள் நீண்ட காலமாக சிரமப்பட்டு வருகின்றனர்” என அவர் உருக்கமாக கூறினார்.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்  கவாஜா அஸிஃப்”கடவுள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும். இதுவரை இந்தியா எவ்விதமான ராணுவ நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும், பாகிஸ்தானில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இந்தியாவுடன் மோதல் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. கடவுள் எங்களை இந்த போர் நெருக்கடியில் இருந்து காப்பாற்றட்டும்” என பீதி மிக்க பதிலளித்தார்.

பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், CDS அனில் சௌஹான் மற்றும் அனைத்து ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்தவுடன், பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார், நள்ளிரவு 2.30 மணிக்கு அவசர ஊடக சந்திப்பை நடத்தினார். “24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம்” என அவர் எச்சரித்தார். அதே நேரத்தில், பஹல்காம் தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, இந்தியா பொய் குற்றச்சாட்டு சுமத்துகிறது என்றார்.