கோக், பெப்சி போன்ற பன்னாட்டு மாபெரும் நிறுவனங்கள் ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்து வரும் இந்திய பான சந்தையில், ஒரு சாதாரண முயற்சி நாடு முழுவதும் வெற்றி பெற்ற பானமாக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த வெற்றியின் பெயர்தான் லஹோரி ஜீரா.
2017ஆம் ஆண்டு மூன்று உறவினர்களான சௌரப் முஞ்ஜால், நிகில் தோடா மற்றும் சௌரப் பூத்னா ஆகியோர் இந்திய பான சந்தையில் பாரம்பரிய, இயற்கையான பானங்களுக்கு இடமில்லை என்பதை கவனித்தனர். தங்களது பாட்டியின் ஜீரா பானத்தை நினைவுகூர்ந்து, அவர்கள் அந்த ருசியையும் பாரம்பரியத்தையும் பாட்டிலில் உருவாக்க முடிவு செய்தனர்.
“லஹோரி” என்ற பெயர், இந்திய ந்ணவுப் பாரம்பரியத்தையும் உண்மை தன்மையையும் பிரதிபலிக்கக் குறிக்கிறது. இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு ஜீரா. கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீராக்களும் இயற்கை மசாலாக்களும் கலந்த கலவையாக இருக்கும். மேலும் நிம்பூ (எலுமிச்சை), கச்சா ஆம் (மாங்காய்), சிக்கஞ்சி, இம்லி பண்டா, மசாலா கோலா போன்ற பானங்களும் இங்கு தயாரிக்கப்படுகிறது.
ருசியில் தனித்தன்மை, பயனாளர்கள் ஆரோக்கியத்தைப் பரிசீலிக்கும் வகை, கண்ணுக்கு தெரியக்கூடிய மசாலா பொருட்கள் தான் இந்நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம்.
இந்நிறுவனத்தின் வணிக வளர்ச்சி மற்றும் சாதனைகள்:
2021: ₹80 கோடி வருமானம்
2022: ₹250 கோடி
2023: ₹312 கோடி
2025: ₹525 கோடி
2026 இலக்கு: ₹1,000 கோடி!
நாடு முழுவதும் 18 மாநிலங்களில், 2,000க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் உள்ளதாகவும், நாடுதொறும் 5 மில்லியன் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
விரிவடையும் சந்தையை கவனித்து, லஹோரி ஜீரா நாட்டின் மேற்கிலும் கிழக்கிலும் சேவையை வலுப்படுத்த, வாப்பி நகரில் புதிய தொழிற்சாலையை நிறுவியுள்ளது. 1,600க்கும் அதிகமான விநியோகக் குழுமம் தற்போது செயல்படுகிறது.
இந்தியாவின் நான்அல்கஹாலிக் பான சந்தை 2029-க்குள் ₹2.10 லட்சம் கோடியாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. லஹோரி ஜீரா, பாரம்பரிய இந்திய சுவைகளை உலக அரங்கில் காட்டக்கூடிய தேசிய மற்றும் சர்வதேச பிராண்டாக மாறும் வாய்ப்புடன் இருக்கிறது.
கோலா பானங்கள் இந்தியாவில் பில்லியன் டாலர் விற்பனையைப் பெறக்கூடுமானால், இந்திய பாணி பானங்களும் அதையே சாதிக்க முடியும்,” என்கிறார் நிறுவனர் நிகில் தோடா.