இந்த நிலையில், தற்போது தான் அவர் ஒரு இலங்கை தமிழர் என்றும், அவரது சொந்த ஊர் திரிகோணமலை என்றும் கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா. சம்பந்தனின் தங்கை மகன் தான் வசி என்று கூறப்படுகிறது.
மேலும், இவர் இந்தியாவில் மட்டுமின்றி, இலங்கையிலும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியையும் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு ஈவண்ட் நிகழ்ச்சிக்காக பிரியங்கா சென்ற போதுதான் வசியை சந்தித்ததாகவும், அப்போது நட்பு ஏற்பட்டு, அதன் பின் காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் தனது சொந்த ஊரான திரிகோணமலைக்கு பிரியங்காவை வசி அழைத்து சென்று விடுவார் என்று கூறப்பட்டாலும், அதில் உண்மை இல்லை என்றும், பிரியங்கா மற்றும் வசி ஆகிய இருவருக்குமே தொழில் சென்னையில் இருப்பதால், அவர்கள் சென்னையில் தான் வாழ்வார்கள் என்றும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.