இந்த நவீன டெக்னாலஜி காலத்தில் பாரம்பரிய முறைகளை பொதுமக்கள் மறந்து வருகின்றன. ஆனால் அந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கினால் என்ன என்று இளைஞர்கள் தொடங்கிய ஸ்டார்ட் அப் தான் மண்பானைகள் உள்பட மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்நிறுவனம் தற்போது மிக வெற்றிகரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
Mittihub என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கடந்த 2021ஆம் ஆண்டு மேகா ஜோஷி மற்றும் அபினவ் அகர்வால் ஆகியோர் தொடங்கினர். இவர்கள் GCEC (Global Centre for Entrepreneurship & Commerce) கல்லூரியில் பயின்ற போது தான் இந்த எண்ணம் உருவானது. மண்ணால் செய்யப்பட்ட கைவினை பொருட்களை மக்கள் மறந்து வரும் நிலையை உணர்ந்த இருவரும், கைவினைஞர்களுக்கு வருமான வாய்ப்பும், பாரம்பரியத்துக்கு உயிரும் கொடுக்க தங்களை அர்ப்பணித்தனர்.
Mittihub நிறுவனத்தின் தயாரிப்புகள்:
சமையல் பாத்திரங்கள்: பிரியாணி ஹாண்டி, டஜின், கடாய்
டேபிள்வேர்: காபி மக்கள், குல்ஹட் செட்கள்
அலங்கார பொருட்கள்: டீ-லைட் ஹோல்டர்கள், செடிகள்
தனிப்பயன் தயாரிப்புகள்: ரிசார்ட், இன்டீரியர் டிசைனர் தேவைகளுக்கேற்ப
விலைகள் ₹400 முதல் ₹25,000 வரை உள்ளது, சாதாரண நுகர்வோரும், பிரீமியம் வாடிக்கையாளர்களும் வாங்கக்கூடிய வகையில் கிடைக்கும்.
Mittihub நேரடி விற்பனையை அவர்களது சொந்த இணையதளமான B2C மற்றும் Amazon Karigar, Amazon US, Walmart ஆகியவை வழியாக விற்பனை செய்கின்றனர். மேலும் ஹோட்டல்கள், ரிசார்ட்கள், இன்டீரியர் டிசைனர் நிறுவனங்கள் வழியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று, Mittihub ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள 50க்கும் அதிகமான கைவினை குடும்பங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது. 15 நாட்கள் பயிற்சியுடன் கைவினைஞர்கள் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள்.
வருமான வளர்ச்சி:
2021: ₹10 லட்சம்
2022: ₹15 லட்சம்
2023: ₹30 லட்சம்
2024: ₹70 லட்சம்
சாதனைகள்:
“ODOP – One District One Product” பட்டியலில் Mittihub தயாரிப்புகள்.
2023-இல் Davos World Economic Forum-இல் விருந்தினராக அமையப்பட்டது.
2,800க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை சேவை செய்துள்ளது.
மேகா ஜோஷி மற்றும் அபினவ் அகர்வால், இந்தியக் கைவினைகளை உலக சந்தைகளில் அழைத்துச் செல்லும் திட்டத்துடன் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். இவர்களது வெற்றி இவர்களுக்கு மட்டுமின்றி மண்ணால் பொருட்களை செய்யும் கைவினை தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.