கையில் பெரிய வாள்.. பஸ், வேன்களை அடித்து நொறுக்கிய 16 வயது சிறுவன்.. வச்சு செஞ்ச போலீஸ்..!

  மும்பையில் 16 வயது சிறுவன் நடுரோட்டில் நின்று கொண்டு, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, வேன் ஆகியவைகளை அடித்து நொறுக்கியதை அடுத்து, போலீசார் அந்த சிறுவனை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மும்பை…

boy

 

மும்பையில் 16 வயது சிறுவன் நடுரோட்டில் நின்று கொண்டு, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, வேன் ஆகியவைகளை அடித்து நொறுக்கியதை அடுத்து, போலீசார் அந்த சிறுவனை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மினி லேண்ட் சொசைட்டி டாங்க் சாலையில் திடீரென 16 வயது சிறுவன், கையில் பெரிய வாள் வைத்துக்கொண்டு, அந்த வழியாக சென்ற பேருந்து மற்றும் சில வாகனங்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது.

சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்த சிறுவன் கத்தியை காட்டி மிரட்டி, பேருந்துகளின் கண்ணாடிகள் மற்றும் ஆட்டோ, தண்ணீர் லாரியை தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், அந்த சிறுவன் தகாத வார்த்தைகளை பேசியதாகவும் கூறப்படுகிறது.

அந்த சிறுவனால் வாகனங்களுக்கு சுமார் 70 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த சிறுவனை கைது செய்தனர்.

பேருந்து, ஆட்டோ மற்றும் தண்ணீர் லாரிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக, அந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில், இந்த சிறுவன் ஏற்கனவே மூன்று முறை இதே போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த முறை கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றும், இதேபோன்று சிறுவனை எச்சரித்து மட்டும் வெளியே விட்டால், இது போன்ற நிகழ்வுகள் இன்னும் நடக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போது அந்த சிறுவனுக்கு தகுந்த மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.