என்ன ஆச்சு வோடாபோன் ஐடியாவுக்கு? அதிருப்தியில் வெளியேறும் பயனர்கள்..!

  வோடாபோன் ஐடியா நெட்வொர்க் பெரும் தடையை நேற்று சந்தித்த நிலையில் ஆயிரக்கணக்கான பயனாளர்கள் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள முடியாமல் தவித்தனர். எவ்விதமான சிக்னலும் இல்லாததும் குறித்து புகார்களை தெரிவித்தனர். இந்த நெட்வொர்க் தடையை…

vodofone 1

 

வோடாபோன் ஐடியா நெட்வொர்க் பெரும் தடையை நேற்று சந்தித்த நிலையில் ஆயிரக்கணக்கான பயனாளர்கள் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள முடியாமல் தவித்தனர். எவ்விதமான சிக்னலும் இல்லாததும் குறித்து புகார்களை தெரிவித்தனர்.

இந்த நெட்வொர்க் தடையை Downdetector எனும் சேவையை கண்காணிக்கும் தளம் உறுதிப்படுத்தியது. நேற்று அதிகாலை 1:02 மணிக்கு, 1,500-க்கும் அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தது. உண்மையான பாதிப்பு நள்ளிரவு 12:00 மணியிலிருந்து தொடங்கியது.

அதிகபட்ச புகார்களில் “சிக்னல் இல்லை” என்றும், , 25 சதவீதம் பயனாளர்கள் முழுமையான பிளாக்அவுட் குறித்து புகார் தெரிவித்துள்ளனர், நெட்வொர்க் திடீரென தடைப்பட்டதற்கு, பல பயனாளர்கள் வோடாபோன் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த பாதிப்பு டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்பட்டுள்ளது. பல மணி நேரங்களுக்குப் பிறகு, வோடாபோன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

“வெள்ளிக்கிழமை அதிகாலை NCR பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நம்முடைய நெட்வொர்க் சேவைகள் குறுகிய நேரம் பாதிக்கப்பட்டது. தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளது மற்றும் சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளன. ஏற்படுத்திய சிரமத்திற்கு வருந்துகிறோம். நம்மை புரிந்துகொண்ட பயனாளர்களுக்கு நன்றி.” என தெரிவித்தது.

வோடாபோன் நெட்வொர்க் இல்லை என்பதால், பணப் பரிவர்த்தனை மற்றும் உணவுப் பகிர்வுகளுக்கான OTP-கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் இந்த பாதிப்பு குறித்த அதிருப்திகள் வேகமாக பரவின. சில பயனாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாற திட்டமிட்டுள்ளனர்.