இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் கடுமையான பதற்ற நிலையை ஒட்டி, இந்திய அரசு 32 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் ஆதரவு கொண்ட பயங்கரவாத குழுக்களை குறிவைத்து இந்திய ஆயுதப்படைகள் நடத்திய “சிந்தூர் ஆபரேஷன்”. இந்த நடவடிக்கை, சமீபத்தில் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த பின்னணியில், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், உரிய அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றி, மே 15 ஆம் தேதி காலை 5.29 மணி வரை சில விமான நிலையங்களில் இருந்து வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்தாகும் என தெரிவித்துள்ளனர்.
அதேபோல, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்த்சர், சந்திகர், பூஜ், ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்கள் மே 15 காலை 5.29 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் டிக்கெட் வைத்துள்ள பயணிகளுக்கு ஒரு முறை கட்டண விலக்கு வழங்கப்படும், அல்லது முழு பணத்துடன் ரத்துசெய்யும் வசதியும் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீப நாட்களில் பாகிஸ்தான் பல இந்திய நகரங்களில், குறிப்பாக எல்லை பகுதிகளில், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்தியாவின் வலிமையான வான்வழி பாதுகாப்பு அமைப்பு, அந்த எல்லா முயற்சிகளையும் வானில் பறந்தபடியே அழித்து வருகிறது. இதுவரை ஒரு தாக்குதலும் வெற்றிகரமாக நடக்கவில்லை என்பது முக்கியமானது.
இருப்பினும் விமான பயணிகள், விமான நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 32 விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 32 விமான நிலையங்களின் முழு விவரங்கள் இதோ: