உடலில் கெட்ட கொழுப்புகளை அகற்ற வேண்டுமா… இதோ சிம்பிளான வழி!

நம் உடலில் நமக்கே தெரியாமல் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து விடுகின்றன. அதனால் நமக்கு உடனடியாக விளைவுகள் இல்லை என்றாலும் அது நாளாக நாளாக நமக்குள் பல பிரச்சனைகளை உண்டு…

bad colestral

நம் உடலில் நமக்கே தெரியாமல் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து விடுகின்றன. அதனால் நமக்கு உடனடியாக விளைவுகள் இல்லை என்றாலும் அது நாளாக நாளாக நமக்குள் பல பிரச்சனைகளை உண்டு பண்ணும். ரத்தநாளத்தை கெட்ட கொழுப்புகள் அடைக்கும்போது இதயப்பிரச்சனை, பக்கவாதம், மாரடைப்பு கூட ஏற்படலாம். அதனால் இதை நாம் ஆரம்பத்திலேயே இதை சேர விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு சிம்பிளான வழி ஒன்று உள்ளது. வாங்க பார்க்கலாம். எலுமிச்சை பழ தோலை கொதிக்க வைத்து குடிப்பதால்….

எலுமிச்சைச் சாறை விட, எலுமிச்சை தோலிலும் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது. கொதிக்கவைத்த தண்ணீரில் எலுமிச்சைசாறு மற்றும் எலுமிச்சை தோலும் சேர்த்து கொதிக்க வைத்த பானத்தை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்துக் கொள்வோம்.

lemon spoiled
lemon spoiled

முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்து, அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்கவைத்து இரக்கவும். 10 முதல் 15 நிமிடம் ஆறவைத்து பின்பு அந்த நீரை வடிகட்டி வைத்துக் கொண்டு, ஒரு டம்ளர் நீருடன் சிறிது தேன் கலந்து குடிக்கவும். இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. எனவே நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

தினமு இந்த காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு நல்ல சுறுசுறுப்பை தரும். செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தப்படுத்தும். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது.