மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம்னு தெரியுமா? அறிவியல் ரீதியான உண்மை இதுதாங்க..!

சிலர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம் தெரியுமா? அறிவியல் ரீதியான உண்மை இதுதான். அந்த மகிழ்ச்சிக்கு 4 வகையான ஹார்மோன்கள்தான் காரணமாம். அது என்ன? அது சுரக்க என்ன செய்யணும்னு பார்க்கலாமா… எண்டோர்பின்…

சிலர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம் தெரியுமா? அறிவியல் ரீதியான உண்மை இதுதான். அந்த மகிழ்ச்சிக்கு 4 வகையான ஹார்மோன்கள்தான் காரணமாம். அது என்ன? அது சுரக்க என்ன செய்யணும்னு பார்க்கலாமா…

எண்டோர்பின்

நாம் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபட்ட பிறகு நாம் கொடுத்த முயற்சிக்கு ஈடாக நமது உடல் இந்த ஹார்மோனை சுரக்கிறது. அதனால் தான் உடற்பயிற்சி செய்த பிறகு நாம் ஒரு வகை மகிழ்ச்சியை உணர்கிறோம். மேலும் சிரிப்பும் எண்டோர்பின்களை சுரக்க ஒரு சிறந்த வழி. எண்டோர்பின் ஹோர்மோன் நமக்குக் கிடைக்க, நாம் அன்றாடம் 30 நிமிட உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கான விஷயங்களைப் பார்த்து மகிழ்வது அவசியம்.

டோபமைன்

நாம் நம் வாழ்க்கை என்ற தொடர் பயணத்தில், நம்மில் ஒவ்வொருவரும் பெரியதாகவோ , சிறியதாகவொ ஏதாவது ஒன்றை சாதிக்கிறோம். இத்தகைய சாதனைகளை நாம் உணரும் போது நமது உடல் டோபமைன் என்ற ஹார்மோனை சுரக்கிறது. நாம் செய்யும் பணிகளுக்கும் முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள் கிடைக்கும் போது இந்த ஹார்மோன் சுரந்து நமக்கு மகிழ்ச்சியை உண்டு பன்னுகிறது.

இதனால்தான் வீடுகளில் பணி புரியும் பல இல்லத்தரசிகள் மகிழ்ச்சி யற்றவர்களாக இருப்பதற்குக் இந்த ஹார்மோன் சுரக்காமை காரணம். ஏனென்றால் அவர்கள் நாளாந்தம் செய்யும் பணிகள் மற்றும் முயற்சிகளுக்காக சரியான பாராட்டுக்கள் கிடைக்காததால் இந்த ஹார்மோன் அரிதாகவே அவர்களிடம் சுரக்கிறது.

செரோடோனின்

இந்த ஹார்மோனானது நாம் பிறர் நலம் நாடும் போதும், அவர்களுக்காக நம்மால் முடிந்த உபகாரங்களை செய்யும்போதும் சுரக்கிறது. இதனால்தான் நம் இயற்கை உலகுக்கும், சமூகத்துக்கும் பயனுள்ள ஏதாவது ஒன்றை செய்து முடிப்பதோடு மனமகிழ்ச்சியை உணர்கிறோம். அதனால்தான் நாம் பிறருக்குக் ஏதாவது ஒன்று கற்றுக் கொடுக்கும் போது அல்லது ஷோசியல் மீடியாவில் ஏதாவது பயனுள்ள ஒரு பதிவை பகிரும் போது அல்லது ஒருவருக்கு ஏதாவது உதவிக் கரம் நீட்டும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

ஆக்ஸிடாஸின்

இந்த ஹார்மோனானது நாம் நமது அன்புக்குரிய நண்பர்களை சந்தித்து, ​​கைகுலுக்கும் போது,அல்லது அவர்களை ​​கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் சுரந்து வந்து மகிழ்ச்சி தருகிறது. அதனால்தான் நாம் வீட்டில் நம் மனைவியை, மற்றும் குழந்தைகளை அன்பாக கட்டிப்பிடித்து அரவணைக்கும் போது அலாதி மகிழ்ச்சி அடைகிறோம்.

எண்டோர்பின் ஹார்மோன் கிடைக்க நாங்கள் தினமும் ஏதாவது உடற்பயிற்சி செய்தாக வேண்டும். டோபமைன் ஹார்மோன் கிடைக்க ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது சிறிய சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும்.

செரோடோன் ஹார்மோன் கிடைக்க ஏதாவது ஒரு வகையில் நாம் பிறர் நலம் நாடக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஆக்ஸிடாசின் ஹார்மோன் கிடைக்க மனைவி, குழந்தைகளை அன்பாக அரவணைக்க வேண்டும்.