பெண் சாபம் பொல்லாததுன்னு சொல்வாங்க. அதுக்கு ஆளாகிடாதீங்க. அப்படி ஆளானவங்க கதி என்ன நிலைமைல இருக்கும்னு பாருங்க. அதுல இருந்து மீளறதுக்கு இந்த வழிபாடு தான் சிறந்தது. வாங்க பார்;;க்கலாம்.
தர்ம சாஸ்திரத்தில் 13 வகையான சாபங்கள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த பெண் சாபம். முதலில் நம்முடைய வீட்டிற்கு பெண் சாபம் இருக்கிறது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்ளலாம்.
ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தாலும் அல்லது ஏழாம் இடத்தில் ராகு இருந்தாலும் இரண்டாம் இடத்தில் ராகு இருந்தாலும் பெண் சாபம் இருக்கும்
அதேபோல் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் கேது இருந்தாலும் இரண்டாம் இடமாகிய குடும்பஸ்தானத்தில் கேது இருந்தாலும் ஏழாம் இடம் ஆகிய களத்திர ஸ்தானத்தில் கேது இருந்தாலும் ஒன்பதாம் இடமாகிய தந்தை ஸ்தானத்தில் கேது அல்லது ராகு இருந்தாலும் பெண் சாபம் இருக்கும்
பெண் சாபம்
அந்த குடும்பத்தில் உள்ள ஆண் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று மனதை மாற்றி திருமணம் செய்து கொள்ளாமல் விடுவதும் ஒரு சாபம் பெண்ணுடன் உடலுறவு ஈடுபட்டு அதாவது திருமணத்திற்கு முன் அவர்களை திருமணம் செய்யாமல் ஏமாற்றுவது அதுவும் ஒரு சாபமாகும். கட்டாயமான பங்கம் படுத்துவதும் ஒரு சாபம். ஒரு ஆண் பெண்ணை மானபங்கம் படுத்துவது திருமணம் ஆன பெண்ணை அவர்கள் கணவரிடம் இருந்து பிரித்து வாழ விடாமல் செய்வதும் அதுவும் ஒரு சாபமாக வந்து விடும்
பெண்கள் மீது வீணாக பழி சுமத்தி அதாவது அவர்களின் மீது களங்கம் விளைவிப்பது அவர்கள் தவறு செய்யாமல் அவர்கள் மீது களங்கம் விளைவித்து ஊரார் முன்னணியில் அவமானப்படுத்தி அவர்களை மானபங்கம் படுத்துவது திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து பிறகு திருமணம் செய்யாமல் விட்டுவிடுவது ஒரு சாபம் ஒரு பெண்ணை அவர்கள் குடும்பத்தில் இருந்து பிரித்து அவர்களை தனிமைப்படுத்தி விடுவது அதாவது அவர்கள் மீது வீண்பழி சுமத்தி அல்லது அவர்களுடன் ஏதாவது ஒரு தொடர்பில் இருந்து அவர்கள் கணவன் மனைவியை பிரிப்பதும் ஒரு சாபம்.
ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டு பெண்ணின் சொத்தை பணம் நகைகளை அபகரித்துவிட்டு அவர்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டால் அவர்களால் கொடுக்கப்படும் சாபமும் பெண் சாபம். வீட்டில் உள்ள பெண்கள் இளம் வயதிலே துர் மரணம் ஏற்பட்டாலும் சாபமாக மாறும். குடும்பத்தில் உள்ள ஒரு பெண் இளம் வயதிலே தற்கொலை செய்து கொண்டாலும் அதுவும் ஒரு சாபமாக மாறும்.
சொத்து அல்லது மற்ற ஏதாவது ஒரு பிரச்சனையில் பெண்கள் கண்ணீருடன் மண்ணை வாரித் தூற்றினாலும் அது ஒரு பெண் சாபமாக மாறும்
எப்படி பாதிக்கும்?
அந்த வீட்டில் இருக்கக் கூடிய பெண்களுக்கு திருமணம் நடக்காமல் இருப்பது. ஒரு வீட்டிற்கு விளக்கு ஏற்றிவைக்க மருமகள் அமையாமல் இருப்பது, திருமணம் நடந்தும் அந்த வீட்டில் இருக்கக்கூடிய பெண்களால் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழ முடியாமல் இருப்பது, குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவு நிம்மதி இல்லாமை இதுவும் அதற்கு காரணமாக அமையும்.
ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்களாலும் அந்த குடும்பத்திற்கு பாலவந்த பெண்களாலும் நிம்மதியாக இருக்க முடியாது கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு பிறரால் தொந்தரவு சாபம் உள்ள குடும்பத்தில் இருந்து வெளியே செல்லும் பெண் அதாவது திருமணம் செய்து கொண்டு வெளியே செல்லும் பெண் அவர்கள் வாழச்செல்லும்குடும்பம் அந்த அளவுக்கு சிறப்பான வாழ்க்கை அமைவதில்லை.
சாபம் உள்ளவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. சாபம் உள்ளவர்களின் வீட்டில் சுப காரியங்கள் எளிதாக நடைபெறாது நடைபெற்றாலும் சண்டை சச்சரவுகள் என்று தான் இருக்கும் வருமான இழப்பும் மனம் உளைச்சலும் அடிக்கடி ஏற்படும். பெண் சாபம் உள்ள குடும்பத்தினர் வாழ்க்கையில் அவரது சிறப்பாக இருக்காது முன்னேற்றம் முற்றிலுமாக இருக்காது அனைத்து விதத்திலும் தோல்விகள் வந்து கொண்டே இருக்கும்.
இதுபோன்ற கஷ்டங்கள் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் ஏதோ ஒருவகையான பெண் சாபம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இதனை தடுக்க அஸ்தமி திதி அன்று பைரவரை வழிபடுவது சிறப்பு மற்றும் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதும் சிறப்பு.