மாதவிலக்கு நேரத்தில் கூட கோவிலுக்கு போவேன்.. எனக்கும் கடவுளுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்: பிரபல நடிகை..!

  பிரபல சீரியல் நடிகை ஒருவர், தான் மாதவிலக்காக இருந்தாலும் அசைவம் சாப்பிட்டாலும் கோவிலுக்கு போவேன் என்றும், “கடவுளுக்கும் எனக்கும் ஒரு நல்ல ‘அண்டர்ஸ்டாண்டிங்’ இருக்கிறது” என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

vjdeepika

 

பிரபல சீரியல் நடிகை ஒருவர், தான் மாதவிலக்காக இருந்தாலும் அசைவம் சாப்பிட்டாலும் கோவிலுக்கு போவேன் என்றும், “கடவுளுக்கும் எனக்கும் ஒரு நல்ல ‘அண்டர்ஸ்டாண்டிங்’ இருக்கிறது” என்றும் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மாதவிலக்கு நேரத்தில் கூட நான் கோவிலுக்கு போவேன். பூஜை அறைக்கும் போய் சாமி கும்பிடுவேன். ஏனெனில் எனக்கும் அய்யனாருக்கும் நல்ல ‘அண்டர்ஸ்டாண்டிங்’ உள்ளது. என்னை அவர் எப்போதுமே ஒதுக்க மாட்டார். என் உடம்பு சரி இல்லை என்றால், அவர் தானே என்னை பார்த்துக்கொள்ள வேண்டும். என்னை அதை செய்யாதேம் இதை செய்யாதே’ என்றெல்லாம் கடவுள் எனக்கு சொல்ல மாட்டார்,” என்று ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் நடித்த விஜே தீபிகா கூறியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இந்த கருத்து புரட்சிகரமானது என்று பலர்  கூறினாலும், ஒரு சிலர் நமது பழங்கால பாரம்பரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறி வருகின்றனர். இருப்பினும், அவருக்கு ஏராளமான ஆதரவு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“காலம் மாறிக்கொண்டிருக்கிறது. காலத்துக்கு மிக்க நாமும் மாற வேண்டும். மாதவிலக்கெல்லாம் இப்போது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை. எனவே, தீபிகா சொன்னது சரிதான்,” என்று பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

இருப்பினும், சிலர், “நீங்கள் தாராளமாக எந்த நேரத்திலும் கோவிலுக்கு போங்கள். ஆனால், அதை ஏன் வெளியே சொல்லி சர்ச்சைக்குள் சிக்க வேண்டும்’ என்று பதிவிட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீபிகா சொன்ன இந்த கருத்து சில வருடங்களுக்கு முன் என்றாலும், இப்போது திடீரென சமூக வலைதளங்களில் ஏன் டிரெண்டாகி வருகிறது என்பதை யாருக்கும் புரியவில்லை