மீனாவுக்கு பணம் கிடைத்தும் பறிபோகிறது.. முத்து கேட்ட கேள்வியால் அதிர்ச்சியில் மீனா..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் அருண், முத்துவிடம் ஊத வேண்டும்’ என்று கூற, முத்து முடியாது’ என பதிலளிக்கிறார். இதனையடுத்து, இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த…

sa7

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் அருண், முத்துவிடம் ஊத வேண்டும்’ என்று கூற, முத்து முடியாது’ என பதிலளிக்கிறார். இதனையடுத்து, இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில், மற்றொரு ட்ராபிக் போலீஸ் அங்கு வர, முத்து அவரிடம் முறையிடுகிறார், ‘நான் எங்கே சென்றாலும், என்னை வேண்டும் என்று இவர் வம்பு இழுக்கிறார்’ என்கிறார்.

அதன்பின் ‘நீங்க ஊத சொன்னால், ஊதுகிறேன்’ என கூறி, பின்னர் ஊத சொல்ல, முத்து ஊத, நீ போகலாம்’ என அனுமதி தருகிறார். முத்து, ‘அது எப்படி? நான் போக முடியாது,. எனது டைம் வேஸ்ட் ஆகிவிட்டதே’ என வாக்குவாதம் தொடர, போலீஸ் ‘பேசாம போப்பா’ என பதிலளிக்கிறார். இதனால் கோபம் அடைந்த முத்து, செல்வத்தை அழைத்து, பாருக்கு சென்று சரக்கடிக்கிறார். குடித்துவிட்டு அருணிடம் மீண்டும் தகராறு செய்ய வேண்டும் என எண்ணி, வண்டியில் பின்புறம் உட்கார்ந்து செல்கிறார். அங்கு சென்று, அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, முத்து அருணை நோக்கி கோபமாக பேச, அருணுக்கு முத்துவின் மீது மீண்டும் கெட்ட அபிப்ராயம் உருவாகிறது.

இதனிடையே, மீனா தனது அம்மாவிடம், ‘இரண்டரை லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது, எங்கேயும் கிடைக்கவில்லை’ என புலம்புகிறார். அப்போது வரும் சீதா, ‘நான் தருகிறேன் உனக்கு பணம்’ என கூற, மீனா, ‘உனக்கு ஏது இவ்வளவு பணம்?’ என கேட்க, சீதா ‘என் கல்யாணத்துக்காக சீட்டு போட்டு சேமித்து வைத்தது. என் கையிலும் 40 ஆயிரம் இருக்கிறது’ என பதிலளிக்கிறார்.

மீனா, ‘நீ கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை ஏன் எனக்கு கொடுக்கிறாய்?’ எனக் கேட்க, சீதா, ‘என் அக்கா யார் முன்னிலையிலும் தலைகுனிந்து இருக்கக்கூடாது, அதனால் தருகிறேன்’ என உறுதியுடன் கூறுகிறார்.

இதற்கிடையில், மீனாவிடம் முத்து குடித்து அருண் தன்னை கடுப்பேற்றியதால் குடித்ததாக சொல்கிறார். ஆனால், மீனா ‘அவர் தனது கடமையை செய்தார். நீங்கள் குடித்ததுதான் தவறு’ என பதிலளிக்கிறார்.

அப்போது, முத்து வாய்தவறி, ‘நீ ஏன் எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்கிறாய்? எனக்கு தெரியும், நீ சம்பாதிக்கிறாய் என்ற திமிரில் பேசுகிறாய்’ என கூற, மீனா, ‘நீங்கள் குடித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். போய் தூங்குங்கள். நிதானமான பிறகு பேசிக்கலாம்’ என கூறுகிறார். முத்துவின் வார்த்தையால் மீனா அதிர்ச்சி அடைகிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

நாளைய எபிசோட் புரமோவில் மீனா, பணத்தை எடுத்துக்கொண்டு அண்ணாமலை இடம் சொல்லி விட்டு கிளம்புகிறார் . அதை பார்த்த விஜயா, சிந்தாமணிக்கு போன் செய்கிறார். சிந்தாமணி, மீனாவிடம் இருந்து பணத்தை பறிக்க திட்டமிடுகிறார். பின்னர், மீனாவிடம் இருந்து பணத்தை பறித்து, அவரை கீழே தள்ளிவிட்டு இருவர் செல்லும் காட்சியுடன் நாளைய எபிசோட் முடிவடைகிறது.