ஒரு நபருக்கு 2 மொழிகள் தெரிந்தாலே பெரிய விஷயம். சிலருக்கு 3 மொழிகள் தெரியும். ஒரு சிலர் 7 பாஷைகளை அசால்டாகத் தெரிந்து வைத்து இருப்பார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் இங்கு பிரபல பாடகி ஒருவர் என்னால் 25 மொழிகளில் பாட முடியும் என்று தெனாவெட்டாக சொல்கிறார். வாங்க அப்படி என்னதான் சொல்றாருன்னு பார்ப்போம்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாடகி உஷா உதூப். இவர் தற்போது மேற்கு வங்கம், கொல்கத்தாவில் இருக்கிறார். இவர் முறைப்படி இசையைக் கற்றுக் கொள்ளவில்லை. இவரது பெற்றோர்கள் இவரை அதிகமாக வெஸ்டர்ன் மியூசிக், இந்துஸ்தானி, கர்நாடக இசையை எல்லாம் கேட்க வைத்தார்களாம். அவர்களோடு இணைந்து உஷாவும் ரேடியோவில் கிஷோரி ஆம்னோகர், படே குலாம் அலிகான் ஆகியோரின் இசையைக் கேட்டபடி வளர்ந்துள்ளார்.
நாளடைவில் இசையில் நல்ல புலமையைப் பெற்று விட்டார். இவர் பாடிய பாடல்களே இதற்கு சாட்சி. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம் அஞ்சலி. இந்தப் படத்தில் வேகம் வேகம் பாடலைப் பாடி அசத்தியவர் இவர்தான். ரொம்பவே ஸ்டைலிஷாகப் பாடி அசத்தி இருந்தார் உஷா உதூப். டான் 2 படத்தில் இரவென்ன பகலென்ன பாடலைப் பாடியுள்ளார்.
லக்கி பாஸ்கர், ஹலோ லவ்வர், நேரம் ஆகிய படங்களிலும் பாடலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் ஒரு தகவலைச் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். என்னன்னு பாருங்க.
நான் 17 இந்திய மொழிகளில் பாடுவேன். இதை நான் ஒரு இன்டர்வியூவில் செல்வதற்காக செய்யவில்லை. நான் ரெகுலராக எல்லா மொழிகளிலும் பாடுவேன். அதுவும் அந்த மொழியை புரிந்து கொண்டு பாடுவேன். ஏனென்றால் அந்தப் பாட்டின் அர்த்தம் தெரியாமல், எக்ஸ்பிரஷன் கொடுக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம். அதனால் தான் எப்போதும் பாடலின் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு பாடுவேன். அதனால் என்னால் 17 இந்திய மொழிகளிலும், 8 வெளிநாட்டு மொழிகளிலும் பாட முடியும் என்கிறார் பாடகி உஷா உதூப்.