நகைச்சுவை நடிகர்களின் வரிசையில் வடிவேலு, சந்தானத்துக்குப் பிறகு தமிழ்சினிமா உலகில் காமெடிக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. அந்தக் குறையை ஓரளவு போக்கும் வகையில் நடிகர் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். ஆனால் பெரிய அளவில் இவர்களது காமெடி சிரிக்க வைக்கவில்லை. இந்த நிலையில் யோகிபாபு குறித்து நடிகை சரண்யா பொன்வண்ணன் என்ன சொல்றாருன்னு பாருங்க. இதைக் கேட்டா ஏன் இப்படி சொல்லிட்டாருங்கறது புரியும். அப்படி என்னதான் சொன்னாருன்னு வாங்க பார்க்கலாம்.
யோகி பாபு ஒரு பொம்மை மாதிரி. எல்லாருக்கும் ஒரு பொம்மையை பார்க்கும்போது அதோட முகம் எப்படி இருக்கு? அதோட உருவம் எப்படி இருக்கு? என்பதெல்லாம் கிடையாது. ஆனாலும் அந்த பொம்மையை ரொம்ப லவ் பண்ணுவாங்கல்ல. யோகி பாபுவும் அப்படித்தான். அவரைப் பார்த்தாலே ரொம்பவே கியூட்னுதான் சொல்லத் தோணும். அது அவருடைய உருவமோ, மூஞ்சோ, மண்டையோ எதுவும் கண்ணுக்குத் தெரியாது.
நமக்கு அவரை பிடிக்கும் அவ்வளவுதான் என்கிறார் சரண்யா பொன்வண்ணன். இவர் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். ஏன்னா யோகிபாபு ஒன்றும் பெரிய ஆண் அழகன் அல்ல. ஹேண்ட்சம் லுக்கும் இல்ல. தலைமுடியைப் பார்த்தா புட்டபர்த்தி சாய்பாபாவைப் பார்த்த மாதிரி இருக்கு. ஆனா அதுதான் அவரோட அக்மார்க்கா இருக்கு. மூஞ்சியும் பெரிசா ஒருமாதிரிதான் இருக்கு. ஆனாலும் கியூட்னு தான் சொல்லணும். ஏன்னா அது ஒரு வகையான வெரைட்டி ஃபேஸ்.