கல்லூரியின் கதை படத்தில் இருந்தே நானும், ஆர்யாவும் நண்பர் ஆனோம். முதல் படத்தில் நல்ல க்ளோஸ் ஆனோம். அப்போ எல்லாம் ஹீரோயின் ப்ரண்ட்ஸா நடிக்க பெங்களூருல இருந்து ரிச் கேர்ள்ஸக் கூட்டிட்டு வருவாங்க. அப்போ தான் எனக்கு மன்மதன் ரிலீஸ் ஆகி ரெண்டு படம்தான் ரிலீஸ் ஆகியிருக்கு.
அதனால பெரிய அளவில் ரீச்சாகல. ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் படத்துல நடிச்சிருக்கேன். ஆனா ரிலீஸ் ஆகல. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாதான் உட்கார்ந்து சாப்பிடுவோம். கேரவன் கிடையாது. அப்போ நீங்க யாருன்னு அந்த கேர்ள்ஸ் கேட்டாங்க. ஆர்யா தான் ஹீரோன்னு தெரியும். உடனே ஆர்யா, என்னது இவரை யாருன்னு கேட்டீங்களா?
இவர்தான் சௌத் இந்தியா காமெடி சூப்பர்ஸ்டார்னு சொன்னாரு. அவங்களும் அப்படியான்னு சந்தேகத்தோடு கேட்டாங்க. உடனே மச்சான் காமெடியை எடுத்து விடுறான்னு ஆர்யா சொல்றான். என்னடா சம்பந்தமே இல்லாம காமெடி சூப்பர்ஸ்டார்னு சொல்லிட்டு இப்ப காமெடி பண்ணுங்கறன்னு கேட்டேன்.
‘மச்சான் பண்ணு பண்ணு இல்லன்னா தப்பாயிடும்’னு சொன்னான். நானும் பழைய ஹிட் பாட்டுல ஹீரோஸ் டான்ஸ் ஆடுனது ஆடிக்காட்டுறேன். மச்சான் இன்னும் பத்தல. இன்னும் பண்ணுன்னு சொல்றான். இதைத்தான் விஎஸ்ஓபில வச்சிருந்தோம். இதை டைரக்டர் பார்த்துட்டாரு. என்ன சார் ஒரு ஹீரோ, காமெடியன் பொண்ணுங்க முன்னாடி போய் டான்ஸ் ஆடி காமெடி பண்ணிட்டு இருக்கீங்கன்னாரு. மச்சான் விட்டுரு. நான் காமெடியனா இல்லாமயே இருந்துக்கறேன்னு சொன்னேன்.
அப்பவும் அவரு அந்தக் காமெடி சூப்பர்ஸ்டாரை விடவே இல்லை. சேட்டை படத்துல டைட்டில்லயே அப்படி போட்டுட்டான். நான் லிங்காவுல ரஜினி சாரு கூட நடிக்கும்போது நீங்க தான் காமெடி சூப்பர்ஸ்டாரான்னு கேட்குறாரு. நான் உடனே இல்ல. சார். ஆர்யா தான் போட்டான்னு சொன்னேன். நீங்க சொல்லாமலா போட்டுருப்பான்னு ரஜினி கேட்டாரு. சார் சத்தியமா நான் சொல்லல சார்னேன். அதாவது என்னை எந்த லெவல்ல மாட்டி விட்டுருக்கான்னு பாருங்க என சிரிக்கிறார் சந்தானம்.