இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஆகியோருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசினார். இந்த பேச்சுவார்த்தை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான நிலவும் பதற்றமான சூழ்நிலையை மையமாக கொண்டது.
இந்த பேச்சுவார்த்தையில் சீனா, பாகிஸ்தானை “நல்ல நண்பன்” என்றும், அதன் எல்லைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சியில் தங்களது உறுதியான ஆதரவு தொடரும் என்றும் தெரிவித்தது.
அஜித் தோவலை சந்தித்தபோது, வாங் யி, ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பகல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தார். “எந்த வகையான பயங்கரவாதத்துக்கு எதிராக சீனா இருக்கிறது,” என கூறினார்.
“போர் என்பது இந்தியாவின் விருப்பம் இல்லை. எல்லோருக்கும் நன்மை தருவது சமாதானமே. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க விரும்புகிறோம்.” என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அஜித் தோவல் தெரிவித்தார்.
இந்த கருத்தை சீனாவும் ஒத்துக் கொண்டு, “இருபுறமும் அமைதியாக இருந்து, பதற்றத்தை அதிகரிக்காமல் பேசிக் கொண்டு தீர்வு காண வேண்டும்,” என தெரிவித்தது.
அதே நேரத்தில், பகல்காம் தாக்குதலில் பல உயிர்கள் இழந்துள்ளதாகவும், இந்திய அரசு பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அஜித் டோவல் தெரிவித்தார். அதற்கு பதிலாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் கூறியபோது “இந்தியா – பாகிஸ்தான் என்றால் இருவரும் எப்போதும் அண்டை நாடுகள் தான். இருபுறமும் பேசிக் கொண்டு ஒரு நீடித்த மற்றும் முழுமையான சமாதான ஒப்பந்தம் ஏற்பட வேண்டும்.” என்றார்.
பாகிஸ்தான் துணைபிரதமர் இஷாக் தாரை சந்தித்தபோது, வாங் யி, “பாகிஸ்தான் கடினமான சூழ்நிலையிலும் பொறுமையாக நடந்துகொண்டு, சரியான முடிவுகளை எடுத்துள்ளது” என்று பாராட்டினார். பாகிஸ்தானின் முழு ஆதரவாக சீனா இருக்கும் என்றும் உறுதியளித்தார்.