கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை விஜய் நடத்தாமல், அமைதியாக இருந்து, ஒரு நல்ல சான்ஸை மிஸ் செய்துவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சைவம், வைணவம் மற்றும் ‘விலைமாது’ என சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பொன்முடி பேசிய நிலையில், கனிமொழி இதற்கு கண்டனம் தெரிவித்த பின்னர்தான் முதலமைச்சர் மு. நடவடிக்கை எடுத்தார் என்பதும், அதனை அடுத்து அவருடைய துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தான் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விஷயத்தில் மௌனமாக இருக்கின்றன.
இதுவே அதிமுக அல்லது பாஜக தலைவர் பேசியிருந்தால், இந்நேரம் அந்த கட்சிகள் கொந்தளித்து, முதல் ஆளாக குரல் கொடுத்திருக்கும். ஆனால் திமுக எது செஞ்சாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருக்கும் கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கின்றன.
திமுக கூட்டணி கட்சிகள் தான் அமைதியாக இருக்கின்றதென்றால், இந்த விவகாரத்தை பாஜக தவிர வேறு எந்த எதிர்க்கட்சியும் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகவில்லை. பாஜகவும் இந்த விவகாரம் ‘இந்துமதத்திற்கு எதிரானது’ என்ற கோணத்தில் தான் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
ஆனால் உண்மையில் இது பெண்களுக்கு எதிரான ஒரு வன்கொடுமை பேச்சு என்று தான் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய் இதை ஒரு விஷயமாக எடுத்து, மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியிருந்தால், பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என்றும், மாதர் சங்கங்களும் சுதாரித்து இருக்கும் என்றும், பெண்களை தரக்குறைவாக பேசிய பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து, விஜய் களத்தில் இறங்கி போராட்டம் நடத்தி இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
அப்படி செய்திருந்தால், பெண்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் என்றும், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மத்தியில் விஜய்யின் மரியாதை இன்னும் அதிகரித்து இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஒரு நல்ல சான்சை அவர் மிஸ் செய்து விட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்போது கூட ஒன்றும் தாமதமாகவில்லை. பொன்முடிக்கு இன்னும் எந்தவித தண்டனையும் கொடுக்கவில்லை. நீதிமன்றமே சாட்டையை எடுத்து, பொன்முடி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இனிமேலாவது விஜய் இந்த விவகாரத்தை கையில் எடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவாரா? பொன்முடியின் அமைச்சர் பதவியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய்யின் இந்த அமைதியை பார்க்கும் போது, ஏற்கனவே சில கட்சிகள் கூறுவது போல், திமுகவின் திமுகவின் B Team ஆக விஜய் இருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.