வந்துவிட்டது ஏஐ ஆசிரியர்கள்.. மொத்த பள்ளி, கல்லூரிகளையும் மூடிவிடலாம்.. அதிர்ச்சியா? இன்ப அதிர்ச்சியா?

  2024 ம் ஆண்டு இயற்பியலுக்கான நொபேல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹிண்டன், பள்ளி, கல்லூரிகளின் எதிர்காலம் குறித்து ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்னும் சில ஆண்டுகளில் மாணவர்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் தேவைப்படாது…

ai teacher

 

2024 ம் ஆண்டு இயற்பியலுக்கான நொபேல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹிண்டன், பள்ளி, கல்லூரிகளின் எதிர்காலம் குறித்து ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்னும் சில ஆண்டுகளில் மாணவர்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் தேவைப்படாது என்று அவர் கூறியதுதான் ஹைலைட்.

‘ஏ.ஐ.யின் தந்தை’ என அழைக்கப்படும் ஹிண்டன், சமீபத்தில் கொடுத்த பேட்டியில், “அடுத்த 10 ஆண்டுகளில் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாடம் சொல்லும் ஏ.ஐ ஆசிரியர்கள், மனித ஆசிரியர்களை விட அதிகம் பயனளிக்கும்” என்று கூறியுள்ளார்.

“ஒரு தனிப்பட்ட ஆசிரியரிடம் இருக்கும் புத்திசாலித்தனம், திறமையை விட இந்த ஏ.ஐ ஆசிரியர்கள் மூன்று அல்லது நான்கு மடங்கு சிறந்தவையாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவை, மாணவரின் ஒவ்வொரு தவறான புரிதலையும் சரியாக கண்டறிந்து, தனிப்பட்ட விளக்கங்களை அளிக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

எதிர்காலத்தில் இப்படித்தான் கல்வி:

ஜெஃப்ரி ஹிண்டன் மேலும் கூறியதாவது, “இந்த ஏ.ஐ ஆசிரியர்களால் பள்ளிகள் கல்லூரிகளின் தேவை குறைந்துவிடும். குறிப்பாக முதுநிலைப் படிப்புகளில், பல்கலைக்கழகங்கள் தேவை குறைவாகிவிடும். ஆனால், ஆராய்ச்சி மற்றும் அறிவியல் வழிகாட்டலில் பல்கலைக்கழகங்கள் இன்னும் முக்கியம் தான் என்று கூறினார்.

மில்லியன் கணக்கான மாணவர்களின் கற்றல் முறையை பகுப்பாய்வு செய்து, ஏ.ஐ விரைவில் மனித ஆசிரியர்களை விட சிறப்பாக கற்றுத்தரும்” என ஹிண்டன் கூறியதை அடிக்கோட்டாக வெளியிட்டார்.

உலகம் முழுவதும் ஏ.ஐ ஆசிரியர்கள்: ஒரு பள்ளி உதாரணம்

ஒரு சமூக வலைதள பயனர், டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் உள்ள பள்ளியை உதாரணமாக காட்டியுள்ளார். அங்கு தினமும் இரண்டு மணி நேரம் ஏ.ஐ ஆசிரியர்கள் வழிகாட்டியதில், அந்த மாணவர்கள் தேசிய அளவில் சிறந்த 2% ல் இடம்பிடித்துள்ளனர். இதுபோல, எஸ்டோனியா, சீனா போன்ற நாடுகளும் ஏற்கனவே பள்ளிகளில் ஏ.ஐ கருவிகளை கற்றலுக்கு பயன்படுத்தி வருகின்றன.

ஏ.ஐ டியூட்டர்களை எதிர்நோக்கும் வலை உலகம்:

இந்த விவகாரத்தில் பலரும் தங்களது மனநிலைகளை வெளிப்படுத்தினர். சிலர், “ஏ.ஐ இருந்திருந்தால் நாமும் பள்ளியில் நன்றாக படித்திருப்போம்” என நெகிழ்ந்தனர். மற்றொருவர், ஜெமினி 2.0 போன்ற கருவிகள் நேரடி உரையாடலோடு கற்றலை சிறப்பாக அளிக்கின்றன என்றும் தெரிவித்தனர்.

ஆனால், சிலர் மனித ஆசான்களிடம் கிடைக்கும் உயிரோட்டம் மற்றும் அறிவாற்றல் நிலைத்தன்மையை ஏ.ஐ மாற்ற முடியாது என்றும், மாணவர்கள் நேரடியாக சேரும் கல்வி வகுப்புகள் அவசியமே என்றும் கூறுகின்றனர்.

ஜெஃப்ரி ஹிண்டன் கூட, “ஏ.ஐ ஆசிரியர்களின் வளர்ச்சி பாரம்பரிய கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளின் தேவைதான் குறைக்கக் கூடும்” என்றும் கூறியதை பார்க்கும்போது இன்னும் 20 ஆண்டுகளில் கல்வியின் அடிப்படை முறையே மாறிவிடும் என தெரிகிறது.

ஏஐ ஆசிரியர்களின் வளர்ச்சியால் மனித ஆசிரியர்களுக்கு வேலையில்லாம போய்விடும் என்று அதிர்ச்சி அடைவதா? அல்லது மாணவர்களுக்கு எளிய, தரமான, அதிக செலவில்லாத படிப்பு கிடைக்கிறதே என இன்ப அதிர்ச்சி அடைவதா? என தெரியவில்லை என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.