வீட்டில் செல்வம் பெருகணுமா? இதோ எளிய வழிகள்… இதையாவது கடைபிடிங்க..!

நாம எப்படியாவது பணக்காரனாகணும். கடனை அடைக்கணும். நாலு பேரு முன்னால கெத்தா வாழணும்னு யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனா அதுக்கு ஏதாவது முயற்சி செய்றோமாங்கறதுதான் கேள்வி. அதற்கு உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்மிகமும்…

நாம எப்படியாவது பணக்காரனாகணும். கடனை அடைக்கணும். நாலு பேரு முன்னால கெத்தா வாழணும்னு யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனா அதுக்கு ஏதாவது முயற்சி செய்றோமாங்கறதுதான் கேள்வி. அதற்கு உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்மிகமும் இருக்கணும். அதுதான் உங்களுக்கான பாதையை இட்டுத் தரும். வாங்க செல்வம் வீட்டுல சேருவதற்கு என்ன வழின்னு பார்ப்போம்.

காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும் குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும் பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பால் பின்தான் லட்சுமி வருவாள்.

பின் பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.

இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும். பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம்.அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும் இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.

வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்)படம் வைக்க வேண்டும்,இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும். மகா சொர்ணாகர்ஷண பைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.

படத்திற்க்கும் ,கல்லாப் பெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்,மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும். லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல ‘ஓம் ஐஸ்வரேஸ்வராய நம’ என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும் .

வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்து விட்டு விநாயகர்,முருகர் படங்களை மாட்டவும் அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும் ,அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.