இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா.. கண்டுகொள்ளாமல் மோடி வாங்கிய சுதர்சன சக்கரம்.. மிகப்பெரிய வெற்றி..!

  ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் இந்திய ராணுவ தளங்களை நோக்கி பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை…

sudharsan

 

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் இந்திய ராணுவ தளங்களை நோக்கி பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மிகத்துல்லியமாக தடுத்து நிறுத்தியது.

இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற, பல வருடங்களாக அமெரிக்கா இந்தியாவை இந்த அமைப்பை வாங்காதீர்கள் என்று அழுத்தம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

CAATSA எனப்படும் அமெரிக்க சட்டத்தின் கீழ், ரஷ்யாவுடன் இந்த பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்காக இந்தியாவுக்கு தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது.

அதைத் தவிர்க்க, அமெரிக்கா தனது ‘பேட்ரியட்’ மற்றும் ‘தாட்’ எனும் மாற்று அமைப்புகளை வாங்குமாறு வலியுறுத்தியது. ரஷ்ய ஆயுதங்கள் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பில் இடையூறு தரும் என்றும் மிரட்டியது

ஆனால் வெளிநாடுகளின் சட்டம் எங்கள் பாதுகாப்பு முடிவுகளை தீர்மானிக்க முடியாது என்று இந்தியா தெளிவாக கூறியது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளால் ஆபத்துகள் உள்ள சூழலில், S-400 அமைப்பு இந்தியாவின் வான்வழி பாதுகாப்புக்கு அவசியமானது என அதிகாரிகள் கூறினர்.

2021இல் இந்த அமைப்பின் விநியோகம் தொடங்கப்பட்டது. இந்தியா விரைவில் அதை தன் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பில் இணைத்துவிட்டது.

இந்த நிலையில் தான் நேற்று பாகிஸ்தான் 15க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அனுப்பியது. உடனடியாக S-400 செயல்படுத்தப்பட்டது. அனைத்து தாக்குதல்களும் தடுக்கப்பட்டன. எந்த ஒரு உயிரிழப்பும் அல்லது சேதமும் ஏற்படவில்லை. இந்த நடவடிக்கை சுதர்சன சக்கரத்தின் பயன்தன்மையை உறுதி செய்கிறது.

ஒரு காலத்தில் இந்திய – அமெரிக்க உறவுகளில் சிக்கலான விசயமாக இருந்த இந்த ஒப்பந்தம், இப்போது இந்தியாவின் பாதுகாப்பு தன்னாட்சிக்கான சின்னமாக மாறியுள்ளது.

அமெரிக்கா தற்போது வரை எந்த தடைகளையும் விதிக்கவில்லை. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு விலக்கு வழங்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர். காரணம் இந்தியா அமெரிக்காவின் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்போது, ‘சுதர்சன சக்கரம்’ என்பது ஒரு ஒப்பந்தம் அல்ல; இந்தியாவின் சோதிக்கபட்ட பாதுகாப்பு கவசம் என்று உலகமே பாராட்டி வருகிறது.