ஒருவரைப் பார்த்த உடனே இவர் யார் எப்படிப்பட்டவர்னு தெரிந்து விடும் என்று சொல்வார்கள். அதை ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழியையும் இணைத்து சொல்வார்கள். அதே நேரம் ஒருவரது தோற்றத்தை வைத்து மட்டும் அவரை எடை போட்டு விட முடியாது. அவர் எத்தகைய திறமை வாய்ந்தவர் என்பதை அவரது செயலை வைத்துத் தான் கண்டுபிடிக்க முடியும்.
நம்மில் பலர் அறிவையும் ஆற்றலையும் அவரவர் தோற்றத்தோடு இணைத்து எடை போடுகிறார்கள். சினிமாக்களில் கதாநாயகர்கள் அழகாக கம்பீரமாகக் கண்டு கண்டு பழகி அறிவாளிகள், ஆற்றல் உள்ளவர்கள் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று தவறாக எடை போடுவார்கள்.
ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் திறமை உள்ளவராகக் கூட இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் அவமானங்களில் இருந்து வந்த வெற்றியாளர்கள்.1930களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு பெரிய உற்பத்தி நிறுவனம் ஏராளமான இயந்திரங்களைத் தயாரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் ஜப்பானுக்கு ஓர் இயந்திரம் தேவைப்பட்டது. அந்த நிறுவனம் ஜப்பானுக்குத் தேவைப்பட்ட இயந்திரத்தை அனுப்பி வைத்தது.
அந்த நேரத்தில் அந்த இயந்திரத்தில் ஒரு ரிப்பேர். அதனால் அவசரமாக அந்த நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து சரி செய்ய ஆளை அனுப்பச் சொன்னது. அந்த நிறுவனமும் ஒரு இளைஞரை அனுப்பி வைத்தது.
அடுத்ததாக ஜப்பான் அந்த நிறுவனத்துக்கு கொஞ்சம் அனுபவசாலியாக வயதானவராக அனுப்புங்கன்னு சொன்னது. அதற்கு அந்த நிறுவனம் பதில் அனுப்பியது. அங்கு நாங்க அனுப்பி இருக்கும் அந்த இளைஞர்தான் அந்த இயந்திரத்தையேக் கண்டுபிடித்தவர். அதனால் அவரைப் பயன்படுத்திக்கோங்கன்னு.
ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை நாம் எளிதில் எடை போடக் கூடாது.நம் கணக்கு பல நேரங்களில் தவறி விடக்கூடும்.
அதனால் யாரையும் எடுத்த உடனே இகழ்ந்து பேசிவிடக்கூடாது. மாறாக, அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்தே ஆக வேண்டும். கண்ணியமாகவும் பேச வேண்டும்.