பாகிஸ்தான் தற்போது தொடர்ச்சியான தோல்விகளால் பதட்டத்தில் உள்ள நிலையில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிஃபின் ஒரு மிக அபத்தமான கருத்து இணையத்தில் பரவலாக கிண்டலுக்கு உட்பட்டுள்ளது.
“இந்திய ட்ரோன்களை எதிர்க்காமல் விட்டது, பாகிஸ்தானின் ராணுவ இடங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதால்தான்.” என்று கூறினார். இந்த விளக்கம் நெட்டிசன்களிடம் கிண்டலுக்குரிய தலைப்பாக மாறியுள்ளது.
அதிலும், அந்த வீடியோவில் கவாஜா ஆசிஃப் தன்னிடம் தேவையான ராணுவ அறிவும், அந்த சம்பவம் பற்றிய தெளிவான புரிதலும் இல்லையென்று நேரடியாகவே ஒப்புக்கொள்கிறார்.
இந்திய ட்ரோன்கள் வந்தபோதும் அதை எதிர்க்க துப்பில்லாமல் முட்டாள்தனமான விளக்கம் கொடுத்து பாகிஸ்தானின் அவமானத்தை மேலும் அதிகரித்திருப்பதாக பாகிஸ்தான் நெட்டிசன்களே விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் அவருடைய ராணுவ அறிவையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.
ஆனால் அவர் அபத்தமாக பேசுவது இது முதல் முறையல்ல. சமீபத்தில், பாகிஸ்தான் ஐந்து இந்திய ரஃபேல் போர் விமானங்களை வீழ்த்தியதாக கூறிய அவர் அதற்கு ஆதாரம் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ தான் என்று கூறி சர்ச்சைக்குள்ளானார்.
இதையடுத்து பேட்டி எடுத்து தொகுப்பாளினி அவரிடம், “நீங்கள் ஒரு பாதுகாப்பு அமைச்சர், சமூக ஊடகங்களை தாண்டி உண்மையான தகவல்கள் பேசவே நாங்கள் உங்களை அழைத்துள்ளோம்,” என்று நேரடியாகவே பதிலடி கொடுத்தார்.
மேலும் பாகிஸ்தான் வீழ்த்தியது எந்த விமானங்கள்? எப்படி கீழே வீழ்த்தப்பட்டது? வீழ்த்த என்ன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது? என்ற கேள்விகளுக்கு அவரால் தெளிவான பதில் தர முடியவில்லை.
இவ்வாறு, பாகிஸ்தான் அரசின் உண்மை நிலையை உளறும் அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலர் ஆவேசமாக கருத்து கூறி வருகின்றனர்.