பாகிஸ்தான் அரசை மீறி ராணுவம் தன்னிச்சையாக தாக்கியதா? அதிர்ச்சி தகவல்..!

  இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் மே 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு  ராணுவ தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடுகளை நிறுத்த முடிவு செய்தன. ஆனால் அந்த முடிவுக்கு பிறகு…

pak army 1

 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் மே 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு  ராணுவ தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூடுகளை நிறுத்த முடிவு செய்தன. ஆனால் அந்த முடிவுக்கு பிறகு சில மணி நேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் ஆபத்தான நடவடிக்கையை எடுத்தது.

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதி  அருகே பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்க தொடங்கியது. இதனால் ஸ்ரீநகரில் வெடிபொருள் சத்தம் முழுக்கவும் கேட்டதாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்த அமைதி உடன்படிக்கையை மீறியதை கடுமையாக கண்டித்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் அரசு இதை சீராக கையாள வேண்டும் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போர் நிறுத்தம் நடந்ததுக்கு பிறகு கூட, ஜம்முவில் ட்ரோன்கள்  பறப்பது காணப்பட்டது. இதுவும் பாகிஸ்தானின் மீறலாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது ஒரு “புரிந்துணர்வு நடவடிக்கை தான் என்றும் பாகிஸ்தான் தாக்கினால் பதிலடியாக இந்தியா தாக்க தவறாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், ரஜோரி, பூஞ்ச் மற்றும் பாதான்கோட் பகுதிகளில் தற்போது அமைதி நிலவுகிறது. ட்ரோன் இயக்கங்கள், துப்பாக்கிச் சூடு போன்றவை எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானை பொறுத்தவரை  அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான தவறான புரிந்து கொள்ளுதல் தான் ஒப்பந்தத்தை மீறி தாக்குதலுக்கு காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் அரசு சரியான முறையில் ராணுவத்திற்கு தகவல் கொடுத்து இருக்காது என்றும் அதனால் தான் ராணுவம் தொடர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஒரு பக்கம் போர் நிறுத்தம் ஒப்பந்தம் என்ற நாடகத்தை பாகிஸ்தான் நடத்தி இன்னொரு பக்கம் ராணுவத்தை தூண்டி இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்றும் இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.

அது மட்டும்  பாகிஸ்தான் அரசின் முடிவுகளை ராணுவம் ஏற்றுக்கொள்ளாமல் தன்னிச்சையாக இந்தியா மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசு ஒருங்கிணைந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தக்க பதிலடி கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது