2024 தொடக்கத்திலிருந்து இந்த அனுமதி பெறும் செயல்முறை நடைபெற்று வந்தது. இப்போது அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்த திட்டத்தை விரைவாக முடிக்க அரசு எடுக்கும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 167 மீட்டர் உயரத்தில் அடுக்குகளுடன் கூடிய இந்தியாவின் உயரமான அணை கட்டப்படுகிறது. இது ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் செனாப் ஆற்றின் கிளைமான மருசுதர் ஆற்றில் அமைக்கப்படுகிறது. பாகிஸ்தான் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு,, இது சிந்து நதிநீர் ஒப்பந்தத்துக்கு எதிரானது என கூறி வருகிறது.
ஆனால் இப்போது அந்த ஒப்பந்தம் செயலிழந்த நிலையில், இந்தியா இந்த திட்டத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறது. இந்த அனுமதி கொடுக்கப்பட்டதே பாகிஸ்தானை பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் 0.1 மில்லியன் ஏக்கர் அடி அளவு தண்ணீரை சேமிக்கக்கூடிய திறனுடன் உருவாக்கப்படுகிறது. இதை சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா பயன்படுத்தக்கூடிய அளவாக அரசு தெரிவிக்கிறது.
பாகிஸ்தானுக்கு செல்லும் மேற்கு நதிகளில் இந்தியா கட்டியுள்ள தற்போதைய நீர்மின் திட்டங்கள் அனைத்தும் நதியின் ஓட்டத்தில் செயல்படும் திட்டங்களாகும். அதாவது தண்ணீரை சேமிக்க முடியாத திட்டங்கள் ஆகும்.
ஆனால் பகல்துல் திட்டம் இந்தியாவின் முதல் நீர் சேமிப்பு திட்டம் என்பதால், இது தண்ணீரை சேமித்து தேவைக்கேற்ப பயன்படுத்தும் வகையில் அமையவுள்ளது.
இந்த திட்டத்தில் 167 மீட்டர் உயரமுள்ள அணை, நிலத்தடியில் அமைக்கப்படும் மின் நிலையம், அதில் 250 மெகாவாட் திறன் கொண்ட நான்கு உற்பத்தி யூனிட்கள் உள்ளன. 2023–24 ஆண்டில் 72 மீட்டர் உயரம் வரை அணை நிர்மாணம் முடிக்கப்பட்டுள்ளது.
2023 ஜூலை மாதம் அணை கட்டும் பணிக்காக முதல் டன்னல் போரிங் மெஷின் இயக்கப்பட்டது. இது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட உயர்தர இயந்திரமாகும். அணை மற்றும் மின் நிலைய வேலைகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
அணை கட்டும் பணி தொடங்கியுள்ளதால், திட்டமிட்ட காலத்திற்குள் இந்த திட்டம் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி 2018 மே 19ஆம் தேதி நாட்டிய நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்த திட்டம் நிறைவு பெற்றுவிடும். அதன்பின் பாகிஸ்தான் நிலைமை படுமோசம் தான் என கூறப்படுகிறது.