சிபிஐ உள்ளே வந்ததானே வழக்கு சுறுசுறுப்பாகும்.. ஆனால் திமுக அரசு சிபிஐக்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்ததா? ஊழல்வாதிகளை காப்பாற்ற திமுக அரசு துணை போனதா? பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையை தடுத்ததா? மடியில் கனமில்லை என்றால் சிபிஐ அமைப்பை பார்த்து பயமேன்? குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்.. இனிமேல் தவெக அரசு சிபிஐ சும்மா புகுந்து விளையாடும்.. ஊழல்வாதிகள் ஒருத்தரும் தப்பிக்க முடியாது…

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு வழங்கிய பொது அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் அந்த முகமையால் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது அதிகாரப்பூர்வ…

cbi ijay

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு வழங்கிய பொது அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் அந்த முகமையால் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு மாநிலத்தின் எல்லைக்குள் ஒவ்வொரு வழக்குக்கும் தனித்தனியாக அனுமதி பெறாமல், சிபிஐ நேரடியாக விசாரணை நடத்துவதற்காக மாநில அரசுகளால் வழங்கப்படும் பரவலான அங்கீகாரமே பொது அனுமதி எனப்படுகிறது. ஜூன் 2023-இல் இந்த அனுமதியைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்ததை தொடர்ந்து, சிபிஐ தன் சுதந்திரமான விசாரணை அதிகாரத்தை இழந்து, ஒவ்வொரு வழக்கிற்கும் மாநில அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ-யின் நான்கு புலனாய்வு பிரிவுகள் கடந்த 2020-21 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சராசரியாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து வந்துள்ளன. குறிப்பாக, இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்ற தொடங்கப்பட்ட 2017-18 காலகட்டத்திற்கு பிறகு, கடந்த 2022-23 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட 58 வழக்குகளே மிக உயர்ந்த எண்ணிக்கையாக இருந்தது. ஆனால், ஜூன் 2023-இல் பொது அனுமதி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அடுத்த நிதியாண்டான 2023-24 இல் வழக்குகளின் எண்ணிக்கை 23 ஆக அதிரடியாக குறைந்தது. எனினும், அதன் தொடர்ச்சியாக 2024-25 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை சற்று உயர்ந்து 31 வழக்குகளாகப் பதிவாகியுள்ளது.

இந்தத் திடீர் வீழ்ச்சி குறித்து சிபிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படாத நிலையில், கடந்த ஓராண்டில் சிபிஐ கோரிய எந்தவொரு வழக்குக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி மறுக்கவில்லை என்று மாநில உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொதுவாக, ஒரு மாநில அரசு தனது பொது அனுமதியைத் திரும்பப் பெற்ற பிறகு, உயர் நீதிமன்றங்களோ அல்லது உச்ச நீதிமன்றமோ உத்தரவிட்டால் மட்டுமே சிபிஐ தன்னிச்சையாக வழக்குகளைப் பதிவு செய்ய முடியும்; மற்றபடி ஒவ்வொரு முறை விசாரணை நடத்தவும் மாநில அரசின் பிரத்யேக ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாகிறது. அதேநேரம், மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்ற அமர்வு ஒன்று தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நான்கு சிபிஐ பிரிவுகளால் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 54 வழக்குகளை ஆய்வு செய்ததில், அதில் குறைந்தது 10 வழக்குகள் ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் நடந்த குற்றங்கள் தொடர்பானவை என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் பணியாற்றும் சிபிஐ அதிகாரிகள் அண்டை மாநிலங்களின் வழக்குகளை விசாரிக்க கூடுதலாக பயன்படுத்தப்படுவது புலனாகிறது. மேலும், இந்த 54 முதல் தகவல் அறிக்கைகளில் 30 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்டவையாகும். எஞ்சியவற்றில் 9 வழக்குகள் மாநில அரசின் முறையான அனுமதிக்கு பிறகும், ஒரு வழக்கு மாநில அரசால் நேரடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டும் பதியப்பட்டுள்ளன.

இதர வழக்குகள் யாவும் எவ்வித அனுமதியும் தேவைப்படாத புதுச்சேரி ஒன்றியப் பகுதியைச் சேர்ந்தவை என்பதோடு, பாரத ஸ்டேட் வங்கியின் திருவனந்தபுரம் கிளை அளித்த புகாரின் பேரில் கேரள அரசின் அனுமதியைப் பெற்று ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கோயில் காவலாளி பி. அஜித் குமார் என்பவரின் காவல் மரண வழக்கு மற்றும் அது தொடர்பான திருட்டு வழக்கு ஆகியவை சமீபத்தில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பொது அனுமதி திரும்பப் பெறப்பட்டதற்குப் பிறகு தமிழ்நாடு அரசால் தானாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

மத்திய அரசுத் தரப்பில் உள்ள சிலர், திமுக தலைமையிலான மாநில அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றம் சாட்டுகின்றனர். பாஜக தலைமையிலான மத்திய அரசின் தலையீடுகளைத் தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்குவதற்கு சிபிஐ-யின் வழக்குகள் ஒரு அடிப்படை முகாந்திரமாக பயன்படுத்தப்படுவதால், அமலாக்கத்துறையின் வேகத்தைக் கட்டுப்படுத்தவே மாநில அரசு இந்த முட்டுக்கட்டையைப் போட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.