பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக, இந்தியா ஒரு பெரிய பதிலடி நடவடிக்கையை நடத்தியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆபரேஷன் சிந்தூர் எனப்பட்ட இந்த தாக்குதலில், இந்திய விமானப்படை ஜெய்ஷ் இ மொஹம்மத் தலைவர் மௌலானா மசூத் அஸர் வதியும் பஹாவல்பூர் பகுதியில் அவர் வீடு மற்றும் தலைமையகத்தை முற்றிலும் அழித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல ஊடகங்களும் சமூக ஊடகங்களில் இருந்து வெளியான தகவலின்படி, மசூத் அஸரின் மூத்த சகோதரி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
மசூத் அஸர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு நிழல் ஆதரவாளராக பணி புரிந்து வந்தவர். காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களில் இவருக்கு தொடர்பு இருந்தது. பஹாவல்பூர் பகுதியிலுள்ள அவர் தலைமையகம், ஜெய்ஷ் அமைப்பின் முக்கிய செயற்பாட்டு மையமாக இருந்தது.
மசூத் அஸரின் தலைமையகம் மற்றும் மதரஸா முற்றிலும் அழிக்கப்பட்டது என பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்தும் தகவலை தெரிவித்து வருகின்றன.
இந்தியாவின் தாக்குதலில் மசூத் அஸர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவருடைய குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக இந்த தாக்குதலில் பலியாகி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
1999 ஆம் ஆண்டு காந்தகார் விமான கடத்தல் சம்பவத்தில் பணயக்கைதிகளை விடுவிக்க தீவிரவாதி மசூத் அசார் விடுவிக்கப்பட்டார் என்பதும் அப்போது முதல் அவர் தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் இன்றைய தாக்குதலில் மசூத் அஸர் ஒருவேளை கொல்லப்பட்டிருந்தால் தீவிரவாதம் முடிவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.