இந்திய ராணுவம் எடுத்து கொண்டது வெறும் 24 நிமிடங்கள் தான்.. ஒவ்வொரு நிமிடத்திலும் என்ன நடந்தது? பரபரப்பான தகவல்..!

  பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரிலும்  செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா இன்று அதிகாலை 1:00 மணிக்கு “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் மிகத் துல்லியமான ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. மொத்தம் 24…

attack

 

பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரிலும்  செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா இன்று அதிகாலை 1:00 மணிக்கு “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் மிகத் துல்லியமான ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.

மொத்தம் 24 நிமிடங்களில் 9 முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டன:

1. 1:04am – ஜெய்ஷ்-எ-மொஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் கோட்லியில் உள்ள அபாஸ் பயிற்சி முகாம் மீது தாக்குதல். இதில் 50க்கும் மேற்பட்ட பயிற்சியில் ஈடுபட்ட தீவிரவாதிகள் இருந்ததாக தகவல்.

2. 1:06am – முரிட்கே பகுதியில் உள்ள லஷ்கர்-எ-தொய்பா அமைப்பின் பெரிய தலைமையக முகாம் மீது ஏவுகணை தாக்குதல். இது அவர்களின் முக்கிய பயிற்சி, திட்டமிடும் மையமாக இருந்தது.

3. 1:12am – பாகிஸ்தானின் பஹாவல்பூர் பகுதியில் ஜெய்ஷ்-எ-மொஹம்மது தலைமையகம் – “மர்கஸ் சுப்ஹான் அல்லாஹ்” மீது தாக்குதல். 2019 புல்வாமா தாக்குதல் திட்டமிடப்பட்ட இடம் இதுவே.

4. 1:15am – சியால்கோட் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் பயிற்சி முகாம் தாக்கப்பட்டது. ஜம்மு & காஷ்மீரில் புகுந்து வரும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் முகாமாக இது செயல்பட்டது.

5. 1:17am – முசஃபராபாத்தின் ஷவை நல்லா முகாம் – ஆயுத களஞ்சியமாகவும் பயிற்சி முகாம் ஆகவும் இருந்தது. 26/11 தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் இங்கு பயிற்சி பெற்றார்.

6. 1:19am – பிம்பர் பகுதியில் மார்கஸ் அஹ்லே ஹதீத் பர்னாலா முகாம் மீது தாக்குதல். புதிய பயங்கரவாதிகளை பயிற்சிக்கான முகாம்.

7. 1:22am – சாக் அம்ரு முகாம் மீது தாக்குதல். இது எல்லையை கடக்கும் முன் பயங்கரவாதிகள் தங்கும் இடமாக இருந்தது.

8. 1:25am – குல்பூர் முகாம். லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் இருவருக்கும் பயிற்சி முகாம் மற்றும் வெடிகுண்டுகள் கையாளும் பயிற்சி மையமாக இருந்தது.

9. 1:28am – முரிட்கேவில் உள்ள லஷ்கரின் துணை முகாம் மீண்டும் தாக்கப்பட்டது. இது தகவல் தொடர்பு மற்றும் சாமான்கள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

கூடுதல் தாக்குதல்கள்:

ஜெய்ஷ் பயன்படுத்திய பஞ்சாப் பகுதியில் உள்ள சர்ஜல்/தெஹ்ரா கலான் முகாம்

ஹிஸ்புல் இயக்கம் தொடர்புடைய மாஸ்கர் ராஹில் ஷாஹித் முகாம்

ஜெய்ஷ் இயக்கத்தின் முசாஃபராபாத் பகுதியில் உள்ள சயீது னா பிலால் மார்கஸ் ஆகியனவும் தாக்கப்பட்டன.

இந்த தாக்குதல் தீவிரவாத இயக்கங்களின் ஒட்டுமொத்த அமைப்பையே குலைத்துவிட்டதாக இந்திய இராணுவம் நம்புகிறது. பாதுகாப்பு வல்லுநர்களும் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என கூறுகின்றனர்.