இந்த ஒப்பந்தங்கள் இருநாடுகளின் முழுமையான வழி நடத்தும் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும். வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு, வளர்ச்சி, ஆராய்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும். பிரதமர் ஸ்டார்மரை விரைவில் இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் உள்ளேன்” என்று மோடி கூறினார்.
இரு நாட்டு பிரதமர்களும் தொலைபேசி வழியாக உரையாடினர். இதில், இந்த வரலாற்று முக்கியத்துவம் உள்ள ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என கூறினர்.
பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்ததாவது: “உலகின் முக்கிய பொருளாதார நாடுகளுடன் கூட்டணி வலுப்படுத்துவது மற்றும் வர்த்தக தடைகளை குறைப்பது எங்கள் புதிய பொருளாதார திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் என்றார்.
இந்த ஒப்பந்தம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வர்த்தகத்தை உள்ளடக்கியதாகவும், இருநாடுகளுக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து, வாழ்வாதாரம் உயர்வதற்கும் வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த ஒப்பந்தம் உலக சந்தைக்கேற்ற புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இருநாடுகளும் இணைந்து உருவாக்க வாய்ப்பளிக்கும். இது இந்தியா – பிரிட்டன் கூட்டுறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது.
இந்தியா – பிரிட்டன் இடையே இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதால், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு பிரிட்டன் இந்தியாவுக்கு ஆதரவு தருகிறது என்ற மறைமுக செய்தியும் இதில் உள்ளது என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.