தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.
தொடர்ந்து 1990களில் தனது 18 வது வயதில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆரம்பத்தில் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக ஆனார் விஜய். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளிவந்தாலே அந்த படம் ஹிட்டுதான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் விஜய்.
தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்த போதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய விஜய் அரசியலில் இறங்கபோவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தான் இறுதியாக கமிட்டான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப்போவதாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில் விஜய் அரசியல் களப்பணிக்காக கோவை சென்றார். அதற்கு அடுத்ததாக மதுரை சென்றார். இதற்கிடையில் அவர் இறுதியாக நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். ஜனநாயகன் படப்பிடிபிற்காக கொடைக்கானல் செல்லும் வழியில் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் தனது தொண்டர்களுக்கு ஒரு சில அறிவுரையை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், என்னுடைய தொண்டர்கள் என் மீது அதிக அன்பு வைத்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நான் வரும் வேலையில் பைக்கில் வேகமாக செல்வது பைக் மேலே ஏறி நின்று வருவது போன்ற செயல்களை செய்ய வேண்டாம். அதை பார்க்கும் போது எனக்கு பதட்டமாக இருக்கிறது என்று அறிவுரை கூறியிருக்கிறார் விஜய்.