நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ் பெற்ற நடிகை ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு அதே ஆண்டு சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வல்லவன், பில்லா, வில்லு, யாரடி நீ மோகினி, இது கதிர்வேலன் காதல் போன்ற முன்னணி கதாநாயகர்கள் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நயன்தாரா.
2010 காலகட்டத்திற்கு பிறகு நாயகன் இல்லாத நாயகி கதையம்சம் கொண்ட படங்கள் ஆன இமைக்கா நொடிகள், நெற்றிக்கண்,கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்தையும் பெற்றார் நயன்தாரா. தற்போது பலப் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில் RJ பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தை தற்போது சுந்தர் சி இயக்கவிருக்கிறார். நயன்தாரா, சுந்தர் சி மற்றும் வேல்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் பூஜை தற்போது பிரம்மாண்டமாக நடந்து முடிந்து ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் பல மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக இருந்து வரும் நயன்தாரா அடுத்ததாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை அறிந்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள்.