நாயை காரில் கட்டி 12 கிமீ தரதரவென இழுத்து சென்ற நபர் கைது.. அதிர்ச்சி காரணம்..!

  கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த 40 வயதுடைய அமித் ஷர்மா என்பவர், தனது ஸ்கார்பியோ கார் மூலம் ஒரு ஜெர்மன் ஷெபர்ட் நாயைக்  12 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கிரேட்டர்…

dog1

 

கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த 40 வயதுடைய அமித் ஷர்மா என்பவர், தனது ஸ்கார்பியோ கார் மூலம் ஒரு ஜெர்மன் ஷெபர்ட் நாயைக்  12 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேட்டர் நொய்டா அருகில் உள்ள  டாங்கூர் பகுதியில் அமித் ஷர்மாவின் மகன் வீதியில் விளையாடி கொண்டிருந்த போது பக்கத்து வீட்டுக்காரரின் நாய் குரைத்ததால் பயந்து கீழே விழுந்தான். பின்னர் அழுதபடி வீட்டுக்குள் ஓடியதால், கோபமடைந்த அமித் ஷர்மா கையை கம்பியுடன் எடுத்துக்கொண்டு வெளியே வந்து நாய்மீது தாக்குதல் நடத்தினார்.

அதுமட்டுமின்றி  அந்த நாயை தனது ஸ்கார்பியோ காரில் கட்டி கிட்டத்தட்ட 12 கிமீ தூரம் தரதரவென இழுத்து சென்றார். இதனால் நாய்க்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

சுதீர் இண்டோரியா கூறியதாவது: “நாயை வீட்டின் வாசலில் கட்டி வைத்திருந்தேன். அப்போது அமித் ஷர்மாவின் மகன் ஒரு கல்லை நாய் மீது எறிந்ததால், நாய் பயத்தில் பாய்ந்தது. அதற்குப் பதிலாக, ஷர்மா நாய் மீது தாக்குதல் நடத்தியதோடு, அதை காரில் கட்டி இழுத்துச் சென்றார்,” என்றார்.

நாயை காரில் கட்டி அமித் ஷர்மா இழுத்து சென்ற போது நாயின் உரிமையாளர் சுதீர் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து நாயை விட்டுவிடுமாறு கெஞ்சியதாகவும், ஆனால் அமித் ஷர்மா அவர் கூறியதை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

பின்னர், காயமடைந்த நாயை உடனடியாக விலங்கு மருத்துவமனையில் சேர்த்ததாகவும், தற்போது தீவிர மருத்துவ கவனிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஷர்மா தன்னை போலீசில் புகார் அளித்தால் கடும் விளைவுகள் என பக்கத்து வீட்டுக்காரரை மிரட்டிய நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விலங்குகள் மீது வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் அமித் ஷர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.