இவை வெறும் பழமொழி மட்டுமல்ல… நல்வாழ்க்கைக்கான திறவுகோல்!

‘பழமொழி சொன்னா சும்மா ஆராயக்கூடாது. அதை அனுபவிச்சிப் பார்க்கோணும்’னு கமல் பம்மல் கே.சம்பந்தம் படத்தில் சொல்வார். அது எத்தனை பெரிய உண்மை என்பதை நீங்கள் இந்தப் பழமொழிகளைப் படித்தாலே தெரிந்துவிடும். பழமொழிகளைச் சும்மா படிப்பதோடு…

pammal k sambantham

‘பழமொழி சொன்னா சும்மா ஆராயக்கூடாது. அதை அனுபவிச்சிப் பார்க்கோணும்’னு கமல் பம்மல் கே.சம்பந்தம் படத்தில் சொல்வார். அது எத்தனை பெரிய உண்மை என்பதை நீங்கள் இந்தப் பழமொழிகளைப் படித்தாலே தெரிந்துவிடும். பழமொழிகளைச் சும்மா படிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் அதைக் கடைபிடித்து வாழப் பழகுங்கள். இங்கு வருவது எல்லாமே எளிமையாக புரிந்து கொள்ளக்கூடியவைதான். வாங்க பார்க்கலாம்.

தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

கரந்தப் பால் காம்பில் ஏறாது. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை. கரும்பு கசப்பது வாய்க்குற்றம். கடன் வாங்கிக் கடன்கொடுத்த வனும் கெட்டான். மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான். காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

கூப்பாட்டால் சாப்பாடாகுமா? எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும். சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும்.

கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்). அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா? (இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?) ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.. (எல்லாம் காலத்தின் கோலம்.) அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான். (அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).

உள்ளப் பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம். இறுகினால் களி. இளகினால் கூழ். ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது. (யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்) எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு. (பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)

எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன? (எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது). விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்). பைய மென்றால் பனையையும் மெல்லலாம். (நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம்.