அந்த கணக்கை அணுக முயன்றபோது, “@KhwajaMAsif has been withheld in in in response to a legal demand” என்று தகவல் ஒன்று ‘X’ தளத்தில் காட்டப்படுகிறது.
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ X கணக்கையும் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களையும் தடை செய்த சில நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா முகமது அஸிப் அவர்களின் அதிகாரப்பூர்வ ‘X’ கணக்கும் இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டது.
X போன்ற சமூக ஊடக தளங்கள், சட்டப்படி செல்லத்தக்க கோரிக்கைகள் வந்தால், முழுமையான கணக்குகளின் தடை செய்யும் சுதந்திரத்துடன் செயல்படுவதால் இந்த முடக்கம் சாத்தியமாகியுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா முகமது அஸிப் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது “இந்திய தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அரசிடம் தெரிவித்து விட்டதாகவும், நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தி இருக்கிறோம் என்றும், எனவே சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக மாபெரும் டிஜிட்டல் தாக்குதலை நடத்தி, 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது. இவை இந்தியா, அதன் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து தவறான, மதவெறி மிக்க, பாகுபாடு தூண்டக்கூடிய செய்திகளை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முக்கிய நடவடிக்கை உள்துறை அமைச்சின் பரிந்துரைகளை தொடர்ந்து எடுக்கப்பட்டது.